சனி, நவம்பர் 26, 2022

நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்!

 நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்!

மு.சிவகுருநாதன்

 


முத்துராஜாவின் ‘பாட்டும் பாடமும்’ நூல் ‘பன்மை’ (2022) வெளியீடாக வந்தது. அதற்கு முன்பே தயாரிப்பிலிருந்த ‘பன்மொழிப் பயணம் – நகைச்சுவைத் தருணம்’ என்ற நகைச்சுவை அனுபவக் கட்டுரை நூல் சற்றுக் காலதாமதமாகத் தற்போது வெளியாகியுள்ளது.

33 சிறிய கட்டுரைகளடங்கிய இக்குறுநூலின் மொத்த பக்கங்கள் 90 மட்டுமே. கட்டுரைகள் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்க அளவில் சுருக்கமாக அமைந்துள்ளது.

அவரது மாலத்தீவு மற்றும் உள்ளூர் அனுபவங்களைச் சுவைபட எழுதியுள்ளார். வெறும் நகைச்சுவைக்காக மட்டும் எழுதாமல் பல்வேறு கருத்துகளையும் வலியுறுத்துகிறார்.

எளிமையாக, இனிமையாக சீக்கிரம் வாசித்து முடிக்கக்கூடிய குறுநூலாக இந்நூல் உள்ளது. இந்நூலை அவரே வெளியிட்டுள்ளார்.

இந்நூலுக்கு திருவாரூர் இரெ.சண்முகவடிவேல், முனைவர் எஸ்.ரவி, நீலகண்ட தமிழன் போன்றோர் அணிந்துரையும் அறிமுக உரைகளையும் அளித்துள்ளனர்.

நூல் விவரங்கள்:

பன்மொழிப் பயணம் – நகைச்சுவைத் தருணம்

ஆசிரியர் முத்துராஜா

பக்கங்கள்: 90

விலை: ₹100

தொடர்புக்கு:

முத்தமிழரசு பதிப்பகம்,

12 ஏ, அக்ரஹாரம்,

குருங்குளம் – அஞ்சல், 609608,

கொல்லாபுரம் – வழி,

திருவாரூர் – மாவட்டம்.

அலைபேசி: 9865158112

மின்னஞ்சல்:

muthurajakgm@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக