வெள்ளி, செப்டம்பர் 11, 2020

'இந்துத்துவா தமிழி'ன் லீலைகள்!

 'இந்துத்துவா தமிழி'ன் லீலைகள்!

மு.சிவகுருநாதன்



 

 

   'இந்துத்துவா தமிழை'த் தெரியாதவர்கள் இருக்க முடியாது. (அதாங்க 'இந்து தமிழ் திசை'; முன்பு 'தி இந்து') தமிழ் நாளிதழ்களில் 'தின மல'த்திற்குப் போட்டியாக வளர்ந்து வரும் நாளிதழ் இது.

   வாசகர் கடிதப்பகுதி முற்றிலும் நீக்கப்பட்டு, எப்போதாவது ஒரு கடிதம் பிரசுரமாகிறது. 'தின மலம்' எதோ ஒரு பெயரில் தானே தயாரித்து வெளியிட்டுக் கொள்ளும். அதே உத்தியை 'இந்துத்துவா தமிழும்' பின்பற்றத் தொடங்கியுள்ளது.

   வாஞ்சிநாதனின் கர்ப்பிணி மனைவியை கூண்டு வண்டியில் சென்று காப்பாற்றிய 3 வயது முத்துராமலிங்கத் தேவர் கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்!

   இன்றைய (26/08/2020) இதழில் தலைமை நீதிபதி பாப்டேவிற்கு ஆதரவாக, பிரசாந்த் பூஷண் டிவிட்டில் உண்மையில்லை என்பதாக அந்த மின்னஞ்சல் கடிதம் சொல்கிறது.

   சைடு ஸ்டேண்ட் போட்ட அந்த விலையுயர்ந்த பைக்கில் (50 லட்சமாம்!) அமர்ந்திருந்த நீதிபதிக்கு பைக் ஓட்டத் தெரியாது என்ற வாதம் கூட இப்படி முன்வைக்கப்படலாம்.

   அருகில் பலர் முகக் கவசம் அணிந்திருக்கையில் பைக்கில் உட்கார்ந்திருப்பவர் ஏன் அணியவில்லை என்றால் ஓடாத பைக்கில் உட்காந்திருப்பவர் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்? என்றும் கேட்கலாம். தலைக் கவசத்திற்கும் இதே பதிலும் கிடைக்கும்.

   நாடே முடங்கிய போது நீதிமன்றங்களும் முடங்கித்தான் போயின. வழக்கமான எண்ணிக்கையில் வழக்குகள் காணொலி வாயிலாக விசாரிக்கப்பட்டன என்று சொல்ல முடியுமா?

   பிரசாந்த் பூஷண் இந்துக்களின் மனதைப் புண்படுத்தினாராம்! விஜயபாரத்தில் வரவேண்டிய இக்கடிதம் எப்படி 'தமிழ் இந்து'வில்?

  தமிழில் செய்தி ஊடகங்களே இல்லை என்று இருந்திட வேண்டியதுதான். இந்த நடுநிலை 'இந்துத்துவா'க்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக