வெள்ளி, செப்டம்பர் 11, 2020

வெறும் சடங்கான ஆசிரியர் தினம்

 வெறும் சடங்கான ஆசிரியர் தினம்

மு.சிவகுருநாதன்

 

ஆசிரியர் தின வாழ்த்துகள் பரிமாறப்படுகின்றன.

இது ஒரு சடங்காக மாறிப்போனது கல்வியின் பெருஞ்சோகம்.

இன்று கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மிக அதிகம்.

புதிய கல்விக்கொள்கை 2020 நமது கல்வியை இதுவரை அடைந்த வளர்ச்சியை சில நூறாண்டுகள் பின்னோக்கி இழுக்கிறது.

இந்துத்துவமும் பாசிசமும் கல்விக்கு எதிரானது; ஆளும் இந்துத்துவ அரசு கல்வியை மக்களிடமிருந்து பறிக்கத் திட்டமிடுகிறது.

ஆசிரியர்கள் இதை வெறுமனே வேடிக்கை பார்க்க இயலாது.

தில்லி தயவிலும் அவர்களது ஆதிக்கத்தின் கீழ் பணிபுரியும் மாநில அரசு கேள்வி கேட்க, நமது உரிமையை நிலைநாட்டத் தயங்குகிறது.

ஆசிரியர்களும் இயக்கங்களும் அவ்வாறு இருக்க முடியாது.

இந்தச் சடங்குக் கொண்டாட்டங்களை விடவும் நமது கல்வி, உரிமை, எதிர்காலம் ஆகியவற்றிற்காகப் போராடும் பெரும்பணி ஆசிரியர் சமூகத்தின் முன்நிற்கிறது.

மக்களுடனும் அனைத்துத் தோழமை சக்திகளுடனும் இணைந்து பாசிச கல்விக்கொள்கை 2020 ஐ முறியடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக