வெள்ளி, செப்டம்பர் 11, 2020

புதிய கல்விக்கொள்கையை ஆராயும் குழுக்கள்?

 புதிய கல்விக்கொள்கையை ஆராயும் குழுக்கள்?

மு.சிவகுருநாதன்

உயர்கல்விக்குழு:

 

புதிய கல்விக்கொள்கையை ஆராய தமிழக உயர்கல்வித்துறை சார்பில் அதிகாரிகள், முன்னாள் துணைவேந்தர்கள் அடங்கிய குழு காலம் கடந்து அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் கல்வியாளர்கள் என்றால் முடிவு எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

'முன்னாள்'களை விட்டால் வேறு ஆள்கள் கிடையாதா?

பள்ளிக்கல்வியில் புதிய கல்விக் கொள்கை இல்லையோ!

அதை யார் ஆய்வு செய்வது?

தனிக்குழு அமைக்கப்படுமா?

பள்ளிக்கல்விக் குழு:

புதிய கல்விக்கொள்கை 2020 இல் பள்ளிக்கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய 13 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஐந்து IAS அலுவலர்கள், 3 முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள், ஒரு தனியார் பல்கலை. வேந்தர், ஒரு முன்னாள் இயக்குநர் என்ற போகும் இப்பட்டியலில் பள்ளிக்கல்வி சார்ந்து ஒரு தமிழ் ஆசிரியை மட்டுமே இருக்கிறார். அதுவும் சாகித்ய அகாடமி (மொழிபெயர்ப்பு) விருதாளர் என்பதால் இணைத்துள்ளனர் போலும்!

உயர்கல்விக்கு அமைக்கப்பட்ட குழு போலவே இதுவும் இருக்கிறது.

பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி அதிகாரிகளும் துணைவேந்தர்களும் முடிவு செய்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்? இது நியாயமா?

குழு உடன் மாற்றியமைக்கப்பட வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக