வியாழன், மே 30, 2019

உலகமயமாக்கல் பெருமையின் அபத்தங்கள்!


உலகமயமாக்கல் பெருமையின் அபத்தங்கள்!


மு.சிவகுருநாதன்


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 05)


    “The primary objective of this model was to make the economy of India the fastest developing economy in the globe with capabilities that help it match up with the biggest economies the world. These economic reforms had influenced the overall economic growth of the country in a significant manner”. (page:220)

     “Despite fluctuations in recent quarters due to disruptions caused by two major structural reforms - demonetisation and the Goods and Service Tax (GST). The world Bank projected a growth rate of 7.3% in the year 2018 - 19 and 7.5% 2019-2020. India's average economic growth between 1970 and 1980 has been 4.4% which rise by 1%  point to 5.4% between the 1990 and 2000”. (page: 220&221)

     “இந்த மாதிரியின் பிரதான குறிக்கோள், இந்திய பொருளாதாரம் உலகில் மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுவதற்கு உதவும் திறனுடன் கூடிய உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை உருவாக்குவது ஆகும். இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றமடையச்  செய்தது”. (பக். 238)

     “சமீபத்திய காலாண்டுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், பண மதிப்பு குறைப்பு, பண்டங்கள் மற்றும் பணிகளின் வரி  (GST) ஆகிய இரண்டு பிரதான சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. 2018 - 19 ம் ஆண்டு 7.3% மற்றும் 2019 - 20ம் ஆண்டு 7.5% வளர்ச்சி விகிதம் என உலக வங்கி திட்டமிட்டுள்ளது. 1970 மற்றும் 1980 ஆண்டிற்கு இடையில் இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 4.41% ஆக இருந்தது. இது 1999-2000 ஆண்டுகளுக்கு இடையே 1.0% உயர்ந்து 5.4% ஆக இருந்தது”. (பக். 238) 

      1990-2000 என்று இருக்க வேண்டும். (ஆங்கில வழியில் சரியாக உள்ளது.) உலக வங்கியின் கணிப்பு, எதிர்பார்ப்பு கிடக்கட்டும். 2000 க்கு பிறகு பொருளாதார வளர்ச்சிப் புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லையா?  ஏன் புள்ளிவிவரங்களை மறைக்க வேண்டும்? உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிட்டால் போதுமா? ராணுவ வலிமை, வல்லரசுக் கனவுபோலவே இதுவும். ‘வேகமாக வளர்ந்துவரும் 5 வது நாடு’, (பக்.238) என்றால் பிற நான்கு நாடுகளைச் சொன்னால்தானே ஒப்பிட ஏதுவாகும்? பெரிய பொருளாதாரத்தை மட்டுமே ஒப்பிடவேண்டும் என்கிற வீம்பு ஏன்? 

GDP - real growth rate (%)

Country
1999
2000
2002
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
2013
2016
2017
India
5.5
6
4.3
8.3
6.2
8.4
9.2
9
7.4
7.4
10.4
7.2
6.5
3.2
7.6
6.7


   பாடநூல்களுக்கும் நல்ல மொழியாக்கத்திற்கும் என்றுமே ஆகாது போலும்! தவறாக மொழிபெயர்ப்பார்கள், அல்லது வழக்கொழிந்த யாரும் பயன்படுத்தாத ஒரு சொல்லை அறிமுகம் செய்வார்கள். ‘demonetisation’ க்கு ‘பண மதிப்பு குறைப்பு’ என்பது சரியான சொல்லாக்கம் இல்லை. பணத்தின் மதிப்பு அவ்வப்போது மாறி வருவது வேறுகதை. ‘பண மதிப்பிழப்பு அல்லது பணமதிப்பு நீக்கம்’ என்பதே சரியானது. ரூ.500, ரூ.1000 பணமதிப்புகள் முற்றாக இழக்கப்பட்டன; குறைக்கப்படவில்லை. ரூ.1000 பணத்தாள் நிறுத்தப்பட்டது, பதிலாக ரூ. 2000 பணத்தாள் வெளியிடப்பட்டது; ரூ.250 பணத்தாள் வெளியாகவில்லை. பிறகெப்படி பண மதிப்பு குறைப்பாகும்? ‘Goods and Service Tax’ (GST) என்பதற்கு  ‘பண்டங்கள் மற்றும் பணிகளின் வரி’ என்ற மொழிபெயர்ப்பும் யாரும் பயன்படுத்தாத ஒன்று. ‘சரக்கு மற்றும் சேவை வரி’ என்பது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் அதிகம் பயன்படுகிறது. ஆனால் பாடநூல் வல்லுநர்கள் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.  ‘பிரதான’, ‘சமீபத்திய’ என்றெல்லாம் பயன்படுத்துவதில் தயக்கமில்லை. ஓரிடத்தில் முதன்மைத் துறை எனும்போது  .  ‘பிரதானம்’ தேவையற்றதாகி விடுகிறது.

     “Stable prices that cover the costs of sustainable production. Market access that enable buyers to trade with producers who would otherwise be excluded from market. Partnership (Producers are involved in decisions their future). The Empowerment of farmers and workers”. (page: 231)

          “Top 10 Largest Multinational Companies in India 2018”,  (page:229) “2018 ல் இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்”, (பக்.247) என்னும் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி, ஒ.என்.ஜி.சி. ஆகிய அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களுடன் இணைத்துப் பட்டியலிடப்படுகிறது. மேலும் இவை பல்வேறு நாடுகளில் கிளைகள் மற்றும் முதலீட்டைக் கொண்டுள்ளன. ‘Anand Milk Union Limited”,  (AMUL) என அறியப்படும் அமுல் “The Gujarat Co-operative Milk Marketing Federation Ltd.” (GCMMF) நிர்வகிக்கப்படும் கூட்டுறவு அமைப்பாகும். இவையனைத்தையும் ஒன்றாக இணைப்பது சரியா? 

     “Indian Multinational Companies” (page:230) என்பதை “வெளிநாட்டிலுள்ள இந்தியாவின் பன்னாட்டு நிறுவனங்கள்” (பக்.248) என்று மொழிபெயர்ப்பது சிக்கலாகாதா? இவற்றில் ஒன்றுகூட இந்திய நிறுவனம் இல்லையே! ‘இந்தியாவின்’ நிறுவனங்கள் மற்றும் ‘இந்தியாவிலுள்ள’ நிறுவனங்கள் என்ற சொற்பயன்பாட்டின் வேறுபாட்டை உணர்க.

     “நிலையான விலையில் நிலையான உற்பத்திச் செலவுகளைக் கட்டுப்படுத்தலாம். சந்தை அணுகுதல் என்பது சந்தையிலிருந்து வெளியேற்றப்பட்ட உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் செய்ய வாங்குபவர்கள் உதவுதலாகும். பங்குதாரர் (உற்பத்தியாளர்கள் தங்கள் எதிர்கால முடிவுகளில் ஈடுபடுதல்) விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது”. (பக்.249)

     உணவுப்பயிர்களைத் தவிர்த்து பிற வணிகப்பயிர்களை மட்டும் பயிரிடுதல், மீண்டும் பயன்படுத்த முடியாத மலட்டு விதைகள், அறிவுசார் சொத்துரிமை (மஞ்சள், வேம்பு, பாசுமதி) போன்றவற்றை மறந்துவிட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்ன? அண்மையில் ‘பெப்ஸிகோ’ உருளைக்கிழங்கு விவாசாயிகள் மீது வழக்குத் தொடர்ந்து, பின்னர் திரும்பப் பெற்றது நினைவிருக்கலாம். 

     ஜி7 நாடுகள் கொடிகளுடன் பட்டியலிடப் படுகின்றன. உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில் ஜி7 நாடுகளை மட்டும் முதன்மைப் படுத்துவதன் நோக்கமென்ன? 

   தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஜி8 நாடுகளிலிருந்து ரஷ்யா விலக்கப்பட்டு ஜி7 நாடாகக் குறைந்துள்ளது. அமெரிக்கா ரஷ்யாவை மீண்டும் சேர்க்க வலியுறுத்துகிறது. 

      இந்தியா, சீனா போன்ற 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்படும் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு பொருளியல் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பாடத்தில் அதை அறிமுகம் செய்வதே நல்லது. 

    “Globalization ((உலகமயமாக்கல்) the process by which business or other organizations develop international influence on start operating on an international scale” (page:234) என்கிற விளக்கம் தமிழ் வழியில், “பண்டங்கள் மற்றும் பணிகள் சர்வதேச சந்தையில் எந்த தடையும் ஏற்படாமல் பல்வேறு பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதாகும்”, (பக்.252) என்று மாறுகிறது.  “பண்டங்கள் மற்றும் பணிகள்”, ஏன் இங்கு வந்தது?  
  
     உலக வர்த்தக அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் (www.wto.org)  பணியாளர்கள் 625 என்று சொல்லும் நிலையில் பாடநூல் 600 என்கிறது.

    பொருளியல் முதல்பாடத்தில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்) பணிகள் துறையில் ‘தபால் மற்றும் தந்தி’ குறிப்பிடப்படுகிறது. இப்போது தந்தி எங்கிருக்கிறது? அஞ்சல்துறை கட்டண வங்கியாக (payment bank) மாற்றப்பட்டுள்ளது. இவற்றைக் கண்டுகொள்வது பாடநூலின் பணியில்லையா? 

    மதிப்புக் கூட்டு முறைக்கு விளக்கப்படம் தேநீர் என்கிறது. மிகவும் சரி. ஆனால் பாடம் ‘தேனீர்’ என்றே அடம் பிடிக்கிறது. சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்க்கப்பட்டால் தேனீர் கிடைக்கும். தேயிலை ஏன் டீ தூளாகிறது? (டீத்தூள் – ஆங்கிலத்தமிழ்?)  

     “இந்தியாவின் கடந்த இரு சகாப்தங்களாக GDP யின் நிலையான  அதிக வளர்ச்சியால் தனி நபர் வருமானம் அதிகரித்தும், முழு வறுமை குறைந்தும் காணப்படுகிறது. 12 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்திய தனிநபர் வருமானத்தில் நடுத்தர வருவாய் நாடுகளின் பிரிவில் இடம் பிடித்துள்ளது”, (பக். 236) 

    ‘இரு சகாப்தங்கள்’ என்றால் என்ன? 10 ஐ தசம் என்றால் 10 ஆண்டுகள் ‘தசாப்தம்’. ‘சகாப்தம்’ (Era) வேறு; இதெல்லாம் தமிழல்ல என்பது இங்கு கவனிக்கவேண்டியது. . இரு பத்தாண்டுகள் அல்லது இருபதாண்டுகள் என்று  மொழிபெயர்க்க என்ன தடை? ஆங்கில வடிவத்தைப் பார்ப்போம். ‘Two decades’ என்பதைத்தான்      ‘இரு சகாப்தங்கள்’ என்று தமிழக்கம் செய்கின்றனர். இவர்களது மொழிப்புலமையைக் கண்டு வியக்காமல் என்ன செய்வது?

       “India has sustained rapid growth of GDP for most of the last two decades leading to rising per capita incomes and a reduction in absolute poverty. Per capita income have doubled in 12 years. In Per capita income, placing India just inside the Middle Income Country category”. (page:219)

      மனித வளக்குறியீட்டை அறிமுகம் செய்த, Mahbub ul Haq - மகபூப் உல் ஹக் அல்லது  மகபூப் அல் ஹக் என்று சொல்லாமல் முகஹப் – உல். ஹிக் என்று பெயர் மற்றும் உச்சரிப்புக் கொலை செய்வதேன்? (பக். 236)  

    மொத்த தேசிய மகிழ்ச்சியில் (GNH) ஜிகமே சிங்கயே வாங்ஹக் (பக்.237) Jigme Singye Wangchuck (page: 219) ஒன்பதாம் வகுப்பில் எப்படிச் சொல்லப்பட்டது என்பதையும் பார்க்கவேண்டும்.    “வான்சுக், வாங்சுக் என்று தமிழில் மாற்றி மாற்றி எழுதுவதைப் போலவே ஆங்கிலத்திலும் கீழ்க்கண்டவாறு எழுவதை மாற்றிக்கொண்டால் நல்லது. ‘Jigme Khesar Nangyel Wanchuck’ (பக்.131, தமிழ்வழி 9 மூன்றாம் பருவம்), Jigme Khesar Namgyel Wangchuck (page: 113, ஆங்கில வழி) – எனது முந்தைய பதிவு ஒன்றிலிருந்து…) ‘சிக்மே சிங்கே வாங்சுக்’ என்று ஓரளவுக்கு எளிமையாக எழுதுவது குழந்தைகளை மிரட்டாமலிருக்கும்!


    தேசிய மகிழ்ச்சிக் குறியீட்டின் களங்கள் (கூறுகள்) பட்டியலிடப்படுகின்றன. 9 ‘கலங்கள்’ (கொள்கலம், தானிய அளவையின் கூறு)  என்று குறிக்கின்றனர். இதையாவது விட்டுவிடுவோம். 

    “The nine domains of GNH are psychological well - being, health, time use, education, cultural diversity and resilience, good governance, community vitality, ecological diversity and resilience, and living standards”. (page:219)

    “உளவியல் நலன், உடல் நலம், நேரம் பயன்பாடு, கல்வி, கலாச்சார பன்முகத் தன்மை மற்றும் பின்னடைவு, நல்ல ஆட்சி, சமூகத்தின் உயர்வு, சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை மற்றும் பின்னடைவு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை GNHpயன் 9 கலங்களாக கருதப்படுகிறது”. (பக்.237)

     ‘time use’ ஐ ‘நேரம் பயன்பாடு’ என்று தனித்தனியே தமிழாக்குவது ஏன்? ‘நேரப் பயன்பாடு’ என்றால்தான் பொருத்தமாக இருக்கும்? 

   “Each domain is composed of subjective (survey based) and objective indicators. The domains weigh equally but the indicators within each domain differ by weight”. (page:219) இவ்வரிகள் தமிழுக்குத் தேவையில்லை போலும்! எனவே வெட்டிவிட்டனர். 

      Factors supporting Indian development

     “A fast - growing population of working age. There are 700 million Indians under the age of 35 and demographic look good for Indian growth in the next twenty years at least. India is experiencing demographic transition that has increased the share of the working-age population from 58 percent to 64 percent over the last two decades. 

      India has a strong legal system and many English-language speakers. This has been a key to attracting inward investment from companies such as those specialising in Information Technology. 

     Wage costs are low in India has made strides in recent years in closing some of the productivity gap between her and other countries at later stages of development.

     India's economy has successful developed highly advanced and attractive clusters of businesses in the technology space. For example witness the rapid emergence of Bangalore as a hub for global software businesses. External economies of scale have deepened their competitive advantages in many related industries”. (page: 219 & 220)

   இதன் தமிழ் வடிவம், 

       இந்திய முன்னேற்றத்தை ஆதரிக்கும் காரணிகள் 

       “இந்தியாவில் 35 வயதிற்கு உட்பட்ட உழைக்கும் வயதில் வேகமாக வளரும் மக்கள். தொகையில் 700 மில்லியன் பேர் உள்ளனர். அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான மக்கள் தொகை குறைவாக உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை மாற்றத்தில், கடந்த இரண்டு சகாப்த்தங்களாக உழைக்கும் வயது மக்களின் பங்கு 58% லிருந்து 64% ஆக உயர்ந்துள்ளது. 

        இந்தியா கடுமையான சட்ட நடைமுறையையும், அதிகமான ஆங்கில மொழி பேசுபவர்களையும் கொண்டுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் நிறுவனங்களிடமிருந்து உள்நோக்கி ஈர்க்கிறது. 

       இந்தியாவில் கூலிச்செலவு குறைவாக இருப்பதால், சமீப ஆண்டுகளில் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையேயான உற்பத்தி இடைவெளி சிலவற்றில் வளர்ச்சியடைந்த நாடுகளை விட இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. 

         இந்தியாவின் பொருளாதாரம் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகவும் முன்னேறிய மற்றும் கவர்ச்சிகரமான வெற்றியை உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, உலகளாவிய மென்பொருள் வணிகங்களுக்கான ஒரு மையமாக பெங்களூரின் விரைவான தோற்றம் சாட்சியாக உள்ளது”. (பக்.236)

      இங்கும் ‘சகாப்தம்’? (the last two decades) ஓரிடத்தில் ‘அடுத்த இருபது ஆண்டுகளில்’ (the next twenty years) எனக் குழப்புவதும் குழம்புவதும் தொடர்கிறது. இந்தியாவில் கூலிச்செலவு குறைவாக இருப்பது நமக்குப் பெருமையா? இந்திய மக்களுக்கு நியாயமான கூலியைப் பெற்றுத் தருவது அரசுகளின் பணியில்லையா?  இந்தியாவில் சூழலியல் தொடர்பான சட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை, குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பது போன்ற காரணங்களால் இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் குப்பைக்காடாக மாறிவருகிறது. இதைச் சரிசெய்யாத பொருளாதார வளர்ச்சி வெறும் வீக்கமே.

WTO வின் குறிக்கோள்கள்கள் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.  


  • அயல்நாட்டு வணிகத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
  • வர்த்தக தாராளமயமாக்கலுடனான பேச்சுவார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
  • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
  • நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைந்து அறிமுகம் செய்தல்.
  • உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
  • முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல். முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் மற்றும் பயனுள்ள தேவைகளை அதிகரித்தல். (பக். 251)



  • To resolve trade disputes.
  •  Introduction the sustainable development and environment can go together”. (page:232) ஆகிய இரு குறிக்கோள்கள் ஆங்கில வழியில் இரண்டு தடவைகள் அச்சாகியுள்ளது. 



    WTO வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கீழ்க்கண்ட தலைப்பில் சொல்லப்பட்டவற்றை விளக்கியுள்ளார்கள் போலும்!


  •  Non-discrimination
  •  More open
  •  Predictable and transparent
  • More competitive
  • More beneficial for less developed countries
  • Protect the environment

      WTO வின் இணையதளம் கீழ்க்கண்ட குறிக்கோள்களையும் பட்டியலிடுகிறது.  “... encourage good governance” என்பது நமக்கு அதிர்ச்சியளிப்பது. இதிலிருந்து நமக்கு புலனாவது வணிகம் மட்டுமே இதன் நோக்கமல்ல. தேவைப்பட்டால் தங்களுக்குச் சாதகமான அரசுகளை உருவாக்குவார்கள். இது ஆப்கானிஸ்தானில் ரஷ்யா, அமெரிக்கா செய்தது போல், ஈராக்கில் அமெரிக்கா செய்ததுபோல் இருக்கும். இந்தியா போன்ற நாடுகளின் தேர்தல்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான அரசுகள் அமைய பரப்புரை செய்கின்றன; கட்சிகளுக்கு நன்கொடையாக பணத்தை வாரி இறைக்கின்றன.

1 ... cut living costs and raise living standards
2 ...
settle disputes and reduce trade tensions
3 ...
stimulate economic growth and employment
4 ...
cut the cost of doing business internationally
5 ...
encourage good governance
6 ...
help countries develop
7 ...
give the weak a stronger voice
8 ...
support the environment and health
9 ...
contribute to peace and stability
10 ...
be effective without hitting the headlines


    “... support the environment and healthஎன்பதெல்லாம் வெற்று முழக்கமே! பாடம் “சுற்றுச்சூழல் குறித்த தரங்களும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ள நிலை”, கடும் சூழலியல் சீரழிவு ஏற்படுவது குறிப்பால் உணர்த்துகிறது. ஆனால் எதிர்கொள்ளும் அபாயம் பெரியது. சமத்துவமின்மை, இயற்கை வளச்சுரண்டல், துரித உணவுப்பயன்பாட்டால் உடல்நலம் கெடுதல் போன்றவையும் சொல்லப்படுகின்றன. ஆனால் உலகமய வளர்ச்சியின் பின்னணியில் சூழலியல் கேடுகள் பெருமளவில் உண்டாகி மனித குலத்தின் அழிவை நோக்கி பயணிக்கிறது என்பதே உண்மை.

                   (இன்னும் வரும்…)

திங்கள், மே 27, 2019

தனியார் பாடநூல் சர்ச்சை: நாசா வியந்த திருநள்ளாறு – சில குறிப்புகள்


தனியார் பாடநூல் சர்ச்சை: நாசா வியந்த திருநள்ளாறு – சில குறிப்புகள்


மு.சிவகுருநாதன்


       விகாஸ் பப்ளிஷிங் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் குழுமத்தின் மதுபன் (MADHUBUN) எஜுகேஷன்ஸ் புக்ஸ் நான்காம் வகுப்பிற்கு ‘தமிழ் அருவி’ எனும் தமிழ்ப் பாடநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியைச் சேர்ந்த செல்வி கோ.ஜீவிதா M.A., B.Ed., என்பவர் இந்நூலை எழுதியதாக முதல் பக்கம் சொல்கிறது. விமர்சனத்திற்குச் செல்லும்முன் இப்புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பாடமான (பாட எண்: 06) ‘நாசா வியந்த திருநள்ளாறு’ முழுமையாகப் பார்த்துவிடுவது நல்லது.  





நாசா வியந்த திருநள்ளாறு

       “நவக்கிரகங்களில் ஈஸ்வரர் பட்டம் பெற்ற சனிபகவான் காரைக்காலுக்கு அருகில், தர்ப்பைப் புல்லால் ஆன காட்டில், சுயம்பு லிங்கமாகத் தோன்றிய தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சிவனை வழிபட்டுப் பேறு பெற்றதால் சனீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

     மகாபாரத்தில் இடம்பெறும் நளமகராஜா கலிபுருடனின் அம்சமான சனி பகவானால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி இறுதியில் இக்கோவிலுக்கு வந்து, நளதீர்த்தத்தில் நீராடிய பின் கலி நீங்கிச் சகல செல்வங்களையும் பெற்றதால் திருநள்ளாறு எனப் பெயர்பெற்றது எனக் கூறப்படுகிறது..

     அப்போது சனிபகவான் நளனின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு வரமளித்தார். அது என்னவெனில் ஒருவர்க்குச் சனியின் ஆட்சி நடக்கும் காலத்தில் அவர் நளனின் வரலாற்றைக் கேட்டால் சனிபகவான் அவரை விடுவிக்க வேண்டும் என நளவெண்பாவின் கலிநீங்கு படலம் கூறுகிறது.

    இத்தகு புகழ் வாய்ந்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலைக் கண்டு வியந்தவர் பலர். அதில் நாசாவும் ஒன்று. திருநள்ளாறு கோவிலின் மீது சூரியக்குடும்பத்தில் உள்ள சனிக்கோளின் கதிர்கள் கருநீலமாக அதிக அடர்த்தியோடு விழுகிறது என்பதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்து வியந்து நின்றனர்.

     அதோடு மட்டுமல்லாமல் பூமியைச் சுற்றிவர நாசாவால் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திருநள்ளாறு வந்தவுடன் ஸ்தம்பித்தது. இதற்குக் காரணம் சனிக்கோளின்  நீலநிறக் கதிவீச்சுகள் நேரடியாகப் பாய்வதே என நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் தங்களது கோவில்களில் அறிவியலையும் புகுத்தியுள்ளார்கள். 

    இதேபோல் திருவண்ணாமலை ஏரிக்குப்பம் பகுதியில் சனீஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோயில் ஆயிரம் ஆண்டுப் பழைமையானது. அதில் லிங்க வடிவில் சனீஸ்வரர் சிலை உள்ளது. அந்தச் சிலையில் அறுங்கோணக் குறியீடு உள்ளது. தற்போது 2004 –இல் நாசாவால் அனுப்பப்பட்ட ‘கேசினி’ செயற்கைக்கோள் சனிக்கோளின் பார்க்கப்படாத பக்கத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த அறுங்கோணக் குறியீடு அப்படத்திலும் காணப்படுகிறது. அது மேகம் போன்ற தோற்றத்தில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. 

     எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில் அறிவியலையும் கோவில் வழிபாட்டோடு இணைத்த நம் முன்னோர்களின் வானியல் அறிவைக்கண்டு வியப்போம்”.

பாட இறுதியில் கீழ்க்கண்ட வினா ஒன்றும் இடம்பெறுகிறது. 

(அ) ஒன்பது கோள்களைப் பற்றி எழுதுக. 



          ‘YOUTURN’ இணைய காணொளித் தளத்தினர் பாடத்தை எழுதிய  செல்வி கோ.ஜீவிதாவிடம் தொடர்புகொண்டு பேசிய ஆடியோவின் பின்னணியில்  நூல் பக்கங்கள் காண்பிக்கப்படுகிறது. இவர்கள் ‘நாசா’ வை மட்டும் தவறு எனவும் அதைத் திருத்தம் செய்திடுவது எப்போது எனவும் வினவப்படுகிறது. 

    திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களின் பதிவில் திருநள்ளாறு கோயிலில் ‘நாசா’ செயற்கைக்கோள் செயலிழந்தது மற்றும் திருவண்ணாமலை சனி கோயில் அறுங்கோணக் குறியீடு பற்றியும் குறிப்பிட்டு பள்ளிக்கல்வித் துறையிடம் முறையிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 

    சென்ற ஆண்டு திருப்பூர் ஜெயந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர் திருநள்ளாறு கதையைக் கூறியதையும் அதே மேடையிலிருந்த முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ‘இஸ்ரோ’ சார்பாக 51 செயற்கைக்கொள்கள் மூலம் சோதனை செய்து இது உண்மையில்லை என்று அறிந்ததை தெரிவித்த தகவலை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த திரு ஆ.ஈசுவரன் வாட்ஸ் அப்பில் தெரிவித்திருந்தார். 

     இதேபோன்ற அநுபவம் எனக்கும் உண்டு. திருவாரூர் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றக்கூட்டத்தில் ‘அப்துல்கலாமின் வாரிசு’ எனப்புகழப்பட்ட மின்வேதியியலாளர் காந்திலெனின் என்பவர் ‘சிதம்பர ரகசியம்’ குறித்த அறிவியல் உண்மைகளை விண்டுரைத்தார். புவியின் ஈர்ப்பு சக்தி முழுமையும் குவிந்திருக்கும் சிதம்பரம் கோயில், நடராஜர் சிலை என்பதாக இவரது பேச்சுகள் இருந்தன. மேலும் மின்சாரத்தைக் கண்டறிந்தவர் அகத்தியர் என்றார்! ‘தொன்மையைத் தேடி… ‘ எனும் அக்கட்டுரை ‘கல்வி அறம்’ நூலில் உள்ளது. 

     இவர்கள் வாழும் உலகின் இருப்பது நமக்கு  பெருமை! இன்னும் எவ்வளவோ அறிவியல் தகவல்கள் உள்ளன! முடிந்தால் அதையும் இணைக்கலாம்! ‘சிதம்பர ரகசியம்’ போன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கொள்ளிக்காடு சனிபகவான் ரேடாரில் மறையக்கூடிய வலிமை பெற்றவர்! இது நமது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியும்! மோடிக்கு மட்டுமல்ல, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க பலருக்கும் இது தெரியும்! அடல் பிகாரி வாஜ்பேயி காலத்தில் இந்தியா கொடுத்த ராடாரிலிருந்து இந்த உண்மை அவர்களுக்குத் தெரிய வந்திருக்கலாம், அதனால் அவர்கள் இங்கு வருகிறாகள், என்று சொன்னாலும் நம்புவதற்கு நாட்டில் பலருண்டு. 

       மயில்சாமி அண்ணாதுரை ‘சன் டிவி’ நேர்காணலில் இந்த வதந்தி உண்மையில்லை என்று சொல்லும் காணொளியும் இணையத்தில் கிடைக்கிறது. இம்மாதிரிப் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘இஸ்ரோ’ நிறுவனம் ஏதேனும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டதாகத் தெரியவில்லை. இது மட்டுமல்ல; இதைபோன்று ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகள் கல்விப்புலத்திலும் படித்தவர்கள் மத்தியிலும் உண்டு. அறிவியல் மனப்பான்மையை வளர்க்காத கல்வி முறை இதற்கு முழுமுதற்காரணமாகும். 



     ஆதம் பாலம் (ராமர் பாலம்), லெமூரியாக் கண்டம் போன்ற பலவற்றில் ‘நாசா’வைத் துணைக்கழைத்து புனைவுகள் உற்பத்தி செய்யப்பட்டு உலவவிடப்பட்டது. ஆதம் பாலம் வதந்திக்கு ‘நாசா’வே விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்தது. 

       இம்மாதிரியான வதந்திகள், புனைவுகள், மூடநம்பிக்கைகள் பாடநூல்கள், பொதுத்தளங்கள், ஊடகங்கள் என எவற்றில் உலவினாலும் பொறுப்பான அறிவியல் நிறுவனங்கள் உரிய விளக்கமளித்து அறிவியல் மனப்பான்மையை  வளர்க்க முயற்சிக்க வேண்டும்.

     சிந்துவெளி முத்திரைகளை கிராபிக்ஸ் செய்து வி.எஸ். ராஜாராம் என்ற NRI ஆய்வாளர் குதிரையாக்கியபோது இந்திய ஆய்வாளர்கள் கள்ள மவுனம் காத்தனர். ஹார்வார்ட் பல்கலைக்கழக சமஸ்கிருத அறிஞர் மிஷேல் விட்ஷல், இந்தியவியல் அறிஞர் ஸ்டீவ் ஃபார்மர் ஆகியோர் உடனடியாக எதிர்வினையாற்றினர். இந்த நேர்மையை ‘நம்ம’ ஆட்களிடம் காண முடியுமா? மேலும் திருப்பதிக்கும் ‘இஸ்ரோ’ வுக்கும்   நெருங்கிய தொடர்புண்டே! இந்திய செயற்கைக்கொள் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பவர் பெருமாள்தானே! இவர்களிடம் அத்தகைய நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியுமா?  

      இவர்களே திருப்பதி, பழனி, திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, ஆலங்குடி, திங்களூர், சூரியனார்கோயில் என்று அலையும்போது நாடு எப்படியிருக்கும்?  சூரிய, சந்திர மறைப்புகள் போன்ற பல்வேறு வானியல் நிகழ்வுகள் குறித்துப் பரப்புரை செய்யும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்றவற்றின் பணிகள் இன்னும் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. இவற்றை கல்வி, முற்போக்கு, சமூக நல இயக்கங்களும் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும்.

      ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை (plastic surgery), உயிரணுச் செல் (stem cell), விமானம் எதுவானாலும் புரானத்திலிருப்பதாகச் சொல்ல இந்துத்துவ ஆள்களும் போலி விஞ்ஞானிகளும் உலாவரும் காலமிது. இந்திய அறிவியல் அமைப்புகள் இவர்களால் சிரழிக்கப்படுகின்றன. இன்று ஆளும் அதிகார வர்க்கம் இதற்கு பேருதவி புரிகிறது. 

   இவற்றில் திருத்தம் கோருவது மிகவும் அபத்தம். ஏனெனில் இவற்றில் உள்ள முழுமையும் அறிவியலுக்குப் புறம்பான புராண அபத்தக் குப்பைகள். இவற்றில் எதைத் திருத்துவீர்கள்? திருநள்ளாறு, திருவண்ணாமலை ஆகியவற்றை நீக்கிவிட்டால் போதுமா? இப்பாடத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் உண்மைக்கும் அறிவியலுக்கும் மாறானவை. எஞ்சிய பாடங்கள் சிறப்பானவை என்று சொல்லமுடியுமா? இம்மாதிரியான தனியார் பாடநூல்கள் எனும் குப்பைகள் கல்விப்புலத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். 

        ‘தர்ப்பாராண்யேஸ்வரர், ஈஸ்வரர், சனீஸ்வரர், நளமகராஜா’ ஆகியவற்றை முறையே  ‘தர்ப்பாராண்யேசுவரர், ஈசுவரர், சனீசுவரர், நளமகராசா’  என்று கிரந்த எழுத்துகளை மாற்றினால் போதும். ‘நவக்கிரகங்கள்’ தமிழ்ச் சொல் இல்லையென்பதால் ‘ஒன்பது கோள்கள்’ என்று சொல்லலாம்; ‘ஸ்தம்பித்தது’ என்பதை ‘தடைபட்டது’ எனலாம் என்கிற ரீதியில் திருத்தங்கள் சொல்வாரும் உண்டு. தமிழ்ப் பாடநூலில் பிறமொழிச் சொற்கள் இருக்கலாமா?  என்கிற கண்ணோட்டத்தில் திருப்தி அடைவோர் உள்ளனர். 

    இம்மாதிரியான போலிப் பாடநூல்கள் தனியார் பள்ளிகள் பயன்படுத்தக் காரணம் என்ன? சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக சமச்சீர் கல்வித்திட்டம் (இது உண்மையான சமச்சீர் கல்வி அல்ல; ஒர் அடையாளமே.) அறிமுகமானபோது இனி ஒரே பாடநூல்கள், சீருடைகள், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயர்நீக்கம் போன்ற பலவற்றைச் சொன்னார்கள். தேர்தல் வந்துவிட்டதால் அவசரகோலத்தில் அமலாக்கினார்கள். அடுத்துவந்த ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தியது. உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி புதிய பாடத்திட்டம் அமலாக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா அரசு வெளியிட்ட ஆணைகள் சமச்சீர்கல்வியை நீர்த்துப்போகச் செய்தன. பலதரப்பட்ட தனியார் பாடநூல்களுக்கு அங்கீகாரமளித்த அரசாணையும் இதிலொன்று. அரசியல்வாதிகள் யாரும் உண்மையான சமச்சீர் கல்விக்கு ஆதரவாக இல்லையென்பதை இச்செயல்கள் உணர்த்தும்.

     அரசின் செயல்வழிக் கற்றல் நடைமுறை தொடக்கத்தில் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பைப் பெறவில்லை. வெறும் அட்டைகளைப் படிக்க எங்களது குழந்தைகள் கிளிப்பிள்ளைகளா என்று கேட்டு பலர் அரசுப்பள்ளியிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை மாற்றினர். அரசின் திட்டங்கள் சரியாக இருந்தாலும்கூட அதை அமலாக்கும் விதம், கல்வி அலுவலர்களின் செயல்பாடுகள்  ஆகியவை 

     இருப்பினும் தற்போது தனியார் சுயநிதிப்பள்ளிகளுக்கு அரசு தன்னுடைய பாடத்திட்ட நூல்களைக் கட்டாயமாகத் திணிக்கிறது. பெரும்பாலான பள்ளிகள் குழந்தைகளிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களைவிட அதிகளவு பணம் பெற்றுக்கொண்டு இதனுடன் கூடவே தனியார் பாடநூல்களை (X’SEED, MADHUBUN) குழந்தைகளின் முதுகில் சுமக்க வைக்கின்றன. சில தனியார் பள்ளிகள் மட்டுமே தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. 

    1 முதல் எட்டு வகுப்புகளுக்கு இந்த இரட்டைச்சுமை குழந்தைகள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை என்பதை பல நேரங்களில் சுட்டிக்காட்டியுள்ளோம். 9 ஆம் வகுப்பிற்கு இந்த இரட்டைச்சுமை இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 9 ஆம் வகுப்பிற்கு எத்தனை பருவங்கள் அல்லது பெரிய பாடநூல்கள் இருந்தாலென்ன? அவர்கள் 10 ஆம் வகுப்புப் பாடங்களைத்தானே படிக்கப்போகிறார்கள்? இதையெல்லாம் கண்காணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை; 100 க்கு 100 தேர்ச்சி இலக்கில் அரசுப்பள்ளிகளும் இந்தப் புதைகுழிக்குள் விழுகின்றன.  

      அதிகம் படிப்பது அறிவு என்கிற பொதுப்புத்தி பெற்றோர்களை ஆட்டுவிக்கிறது. கல்வியாளர்களுக்கு இது குறித்த தெளிவான பார்வைகளில்லை. அரசின் பாடநூல்கள் குழந்தைகளுக்கு கூடுதல் சுமைதானே தவிர அவை கற்பிக்கப்படுவதோ, அவற்றில் தேர்வுகள் நடத்துவதோ இல்லை. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு முகவர்கள் போல் செயலாற்றுகிறது. தனியார் பள்ளி ‘லாபி’யைத் தாண்டி எதுவும் கல்விக்குள் நுழையமுடியாது. (எ.கா. +1 மதிபெண்கள் மேற்படிப்பிற்குத் தேவையில்லை, 9 ஆம் வகுப்பிற்கு முப்பருவமுறை நீக்கம்)

    தமிழ்நாடு பாடத்திட்டம், கேந்திரிய வித்யாலயா, CBSE, ICSE ஆகியவற்றைத் தவிர பிற தனியார் பாடத்திட்ட நூல்களுக்கு எவ்வாறு அங்கீகாரமளிக்கப்படுகிறது.  அவைப் பிழையின்றிச் சரியாக உள்ளதா NCF 2005 போன்ற அரசின் கல்விக்கொள்கைகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா? நாட்டில் கல்வியமைப்புகள் என்ன செய்துகொண்டுள்ளன?  எவ்வித ஆய்வுகளும் இல்லாமல் எப்படி அனுமதிக்கப்படுகிறது? 

       இதைப்போல அரசு தனது பாடநூல்களைத் தனியாரிடம் விற்றுவிட்டால் போதுமா? அவை அங்கு நடைமுறையில் உள்ளதா என்பதைக் கல்வித்துறை ஏன் கண்காணிப்பதில்லை? 10 மற்றும் +2 வகுப்புகளில் 100 க்கு 100 தேர்ச்சி போதும் வேறு எதுவும் தேவையில்லை என்கிற நிலைப்பாடு கல்வியை வணிகச் சரக்காக்கி, 9 மற்றும் +1 மாணவர்களை தேர்ச்சிபெற இயலாதவர்கள் என பள்ளியைவிட்டுத் துரத்தும் செயல்கள் அரங்கேறுகின்றன. 

    பாடத்திட்ட மாற்றங்கள் படிப்படியாக மூன்று நான்காண்டுகளில் நடைபெறுவதுதான் நல்லது. அடுத்த ஆண்டில் அமலாகும் புதிய பாடங்களும் அவசரக்கோலத்தில் இவ்வாண்டே நடைமுறைக்கு வருகின்றன. இதனாலும் பாடநூல்கள் தரமின்றிப் பிழையாக உள்ளன. இவற்றின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போக்கு மிகக்குறைவு. அச்சில் வந்துவிட்டாலே இங்கு அது வேதமாகிவிடுகிறது. சுட்டிக்காட்டப்ப்படும் பாடநூல் பிழைகளை ஏற்றுத் திருத்தும் மனநிலை பாடம் எழுதும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், SCERT, கல்வித்துறையினர் என எவருக்கும் இல்லை. நாங்கள் பாடுபட்டு உழைத்த உழைப்பை எப்படி பிழை என்று சொல்லலாம் என்ற மனப்போக்கு இருப்பது நல்லதல்ல. கொலைகாரனின் செயல்கூட உழைப்புதான்! அதற்காகக் குற்றமில்லை எனலாமா? 

    மாவட்டந்தோறும் பாடநூல் பிழைகளைத் திருத்த பணிமனைகள் நடத்தப்பட்டதாக அறிகிறோம். இதுவும் ஆசிரியர்களுக்கு அளிக்கும் பயிற்சி போன்ற ஒரு சடங்குதான்.  சிலர் கடினமுயற்சி செய்து திருத்தங்களை கோரினாலும் அவை ஏற்கப்படுமா என்பது அய்யமே. அரசுப்பள்ளிப் பாடநூல்களிலும் பல்வேறு மூடநம்பிக்கைச் சிந்தனைகள் உண்டு. (எ.கா. மநுநீதிச்சோழன், குடவோலை முறை மக்களாட்சி) அவற்றையும் உடனடியாகக் களையவேண்டும். இதற்காக வரும் ஆண்டு வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒரு சுற்றறிக்கை மூலமாகவே இதைச் செய்யமுடியும். 

     தனியார் பள்ளிகளில் படிக்கும் பெற்றோர்கள் பெரும்பாலும் ஓரளவு படித்தவர்கள். பணம் செலவளித்தால் அது தரமானது என்று கருதும் இவர்கள், ஓய்வு நேரத்தில் தங்களது குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என அறிந்துகொள்வது நல்லது. அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் முரட்டுத்தனமாகவும் குற்றச்செயலில் ஈடுபடுவராகவும் இருப்பர், என ஒரு தனியார் பாடநூல் சொன்னதல்லவா! தங்களது குழந்தைகள் என்ன படிக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. இவற்றில் அரசை நம்பிப் பலனில்லை. கண்காணிப்பு பல தளங்களில் நிகழவேண்டும்.