வியாழன், செப்டம்பர் 10, 2020

காவல்துறையும் ரவுடியிசமும்

 காவல்துறையும் ரவுடியிசமும்

மு.சிவகுருநாதன்

 

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுவெடி குண்டு வீசி காவலர் படுகொலை என்று செய்தி வந்தது...

   சில மணி நேரத்தில் வெடிகுண்டு வீசிய நபரும் பலி என்று சொல்கிறார்கள்.

   உண்மையில் என்னதான் நடந்தது? தற்போது மோதல் படுகொலைகளுக்கு நாட்டு வெடிகுண்டும் பயன்படுகிறதா?

   போக்கிரிகளை உருவாக்குவதும் அவர்களைப் பாதுகாப்பதும் தேவைப்படும்போது போட்டுத் தள்ளுவதும் காவல்துறையின் பணியாக இருக்க முடியாது.

   இரு கொலை மற்றும் 5 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை ஏன் இவ்வளவு நாளாக கைது செய்யவில்லை?

   அவர்களை கைது செய்ய உரிய பாதுகாப்புடன் ஏன் காவல்துறை செல்லவில்லை?

   இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? அப்பாவிக் காவலர் பலிகடா ஆக்கப்பட்டாரா?

   அப்பாவிகள் அடித்துக் கொல்லும் காவல்துறை கிரிமினல்களிடம் அதிகாரத்தைக் காட்டத் தயங்குவதேன்?

   பெண் ஊடகவியலாளர்களை இழிவாகப் பேசிய, சித்தரித்த, எஸ்.வி.சேகர், கிஷோர் சாமி, சசிகுமார் போன்றவர்கள் மீதும், நீதிமன்றத்தை மிக மோசமாக இழிவுபடுத்திய ஹெச்.ராஜா போன்றவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை. பொறுக்கிகளும் போக்கிரிகளும் இங்கு எவ்வித பயமின்றிச் சுதந்திரமாகச் செயல்படலாம் என்பதே காவல்துறையின் சட்டமாக உள்ளது.

  உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுத்திருந்தால் அப்பாவிகள் பலியாகாமல் தடுத்திருக்கலாம்.

    சி.பி.சி.ஐ.டி. போன்ற உரிய அமைப்புகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக