வெள்ளி, செப்டம்பர் 11, 2020

ஆன்லைன் வகுப்புக் கொடுமைகள்!

 ஆன்லைன் வகுப்புக் கொடுமைகள்!

மு.சிவகுருநாதன்

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு வாரம் விடுமுறையாம்! (செப்.21 முதல் செப்.25 முடிய)

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை வாரத்திற்கு மூன்று வகுப்புகள் என்று வரையறுத்த கொடுமை என்ன சொல்வது?

6-14 வயதெல்லைக் குழந்தைகளை ஒன்றாகக் கருதுவது சரியா?

1-5 க்கு ஒரு வகுப்பு

6-8 க்கு இரு வகுப்புகள்

9,10 க்கு மூன்று வகுப்புகள்

+1,+2 க்கு நான்கு வகுப்புகள்

என்றாவது வரையறுத்திருக்கலாம். இதெல்லாம் நிபுணர்கள் குழு செய்கிறதாம்! நம்புங்கள்!!

இப்போது மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகள் இன்னும் எட்டாத குழந்தைகள்...!?

இது சமத்துவமற்ற நடைமுறை. பேரளவு குழந்தைகள் இதற்கு அப்பாலிருக்கும்போது இதைப் பற்றி மட்டும் கவலைப்படுவது ஏன்?

இதற்குள் வராத குழந்தைகளுக்கு ஏற்படும் அழுத்தங்கள், சுமைகள் வேறுவிதமானது. இதைப் பற்றி கவலை கொள்வது இங்கு பலரும் அறிய விரும்பாதது.

சமத்துவமற்ற, மன அழுத்தம் உண்டாக்குக்கிற முறையை ஒழிப்பதே நல்லது. கெடுவாய்ப்பாக மத்திய, மாநில அரசுகளும் நீதிமன்றங்களும் குழந்தைகளுக்காகதாக இல்லை.

வரும் மாதங்களில் பள்ளி திறப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஆன்லைனில் இணைந்த, இணையாத என இரு தரப்பு இருக்குமே. அவர்களுக்குள் எவ்விதச் சமநிலை பேணப்படும்?

கொரோனா அனைத்து தரப்பு மக்களையும் பாதித்திருக்கிறது. இம்மாதிரியான செயல்பாடுகள் மூலம் இடைவெளி இன்னும் அதிகரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக