சனி, செப்டம்பர் 17, 2016

வெறியூட்டுதல் தகுமா?

வெறியூட்டுதல் தகுமா?

  மு.சிவகுருநாதன்

முத்துகுமார்கள், செங்கொடிகள், விக்னேஷ்குமார்கள் இன்னும் எத்தனை காலம் தீயில் கருகுவது?

இவர்களை வெறியூட்டி சமநிலைத் தடுமாற வைக்கும் சீமான்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வது எப்போது?

இவர்கள் உயிர்துறப்பது தமிழர்களுக்காகவா. அல்லது தமிழ் முதலாளிகளுக்காகவா?

தமிழ் முதலாளிகள் நல்லதே செய்வார்கள் என்பது என்ன வகையான கருத்தியல்?

ஹிட்லரின் நாசிசக் கருத்தியலின் மறு வடிவம்தானே இது!
தமிழ், தமிழர்கள், ஈழம், காவிரி, ஜல்லிக்கட்டு என்ற எளிய சமன்பாட்டுப் போராட்டங்கள் இங்கே உற்பத்தியாகின்றன.

சாதி, தீண்டாமை வன்கொடுமைகள் குறித்து ஏன் கடுமையான போராட்டங்கள் இல்லை?

அரூபமான நிழல் யுத்தங்களைச் செய்யும் இவர்கள் உண்மைகளைக் கண்டு ஓடி ஒளிவது ஏன்?

கர்நாடகக் கலவரப் பின்னணியில் இந்துத்துவ மதவெறி சக்திகள் இருப்பதாகக் கூறப்படுகிறதே!

அவர்களோடு நெருக்கமாக உறவாட இவர்கள் வருந்தியதுண்டா?

தமிழ் முதலாளிகள் தமிழை வாழ வைப்பார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

உங்களுக்கு தேர்தல் நிதி கிடைக்கலாம். அவ்வளவே!

பாசிச சக்திகள், இனம், மொழி, தேசம், சாதி என எந்நிலையில் உற்பத்தியானலும் அழிக்கப்படவேண்டிய கிருமிகளே..

இளம் உள்ளங்களை இவ்வாறு வெறியூட்டி, தற்கொலைக்குத் தூண்டுவதும், கொலைகாரர்களாக மாற்றும் ஒன்றுதான்.

இம்மாதிரி மனநிலை கொண்டவர்கள் எங்கள் அமைப்பு அல்லது கட்சிகளில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்று தலைமைகள் அறிவிக்குமா?

அப்போதுதான் இம்மாதிரியான உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இம்மாதிரி வெறியூட்டி, உயிரை மாய்க்க வைத்து, அவர்களது பிணத்தின் மீது அரசியல் செய்யும் சக்திகள் உடனடியாக ஒழிக்கப்படவேண்டும்.

கானல்நீர் போராளிகள் இந்த சமூகத்திற்கு எதையும் செய்யப்போவதில்லை.

இளைஞர்களை பாசிச சக்திகளிடமிருந்து எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறோம்?

கருத்தியல், அகன்ற படிப்பு, நடைமுறை யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் தன்மை இளைஞர்களுக்கு வரவேண்டும்.

அவர்கள் விட்டில் பூச்சிகளல்ல; முதுகெழும்பில்லாத புழுக்களுமல்ல என்பதை உணரத் தொடங்கும்போது பாசிசம் வீழ்ந்து மடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக