சனி, ஆகஸ்ட் 20, 2022

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…

 

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்

மு.சிவகுருநாதன்

        104 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் தங்கியிருந்த இடம் மேலநாகை என்னும் கிராமம்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலநாகை என்னும் இச்சிற்றூர் உள்ளது.

 


    அங்கு  தியான மண்டபம் ஒன்றைக்  கட்டியிருக்கிறார்கள்.


 

    27.05.2018  அன்று  மாலை எனது மூத்த மகள் கவிநிலாவுடன் ஒருமுறை  மேலநாகை சென்று வந்தேன். அப்போது எடுக்கப்பட்ட மூன்று படங்களும் இங்கே உள்ளன. 


 

       20/08/2022 அன்று  கவிநிலா, கயல்நிலா மற்றும் நிலாவின் சித்தி மகள்  சாய்மகி ஆகியோர் பாரதி நினைவு மண்டபம் சென்றோம். 


 

பாரதி நினைவாக கயல்நிலா "ஓடிவிளையாடு பாப்பா" பாடலைப் பாடினார்.

சில படமெடுத்துக் கொண்டு திரும்பினோம்.

இத்துடன் முந்தைய பதிவிலிருந்து

பத்தரிக்கையாளர் பாரதி

          பத்தரிக்கையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஸ்காட்லாந்து யாடுக்கு நிகரான தமிழக காவல்துறைக்கு கழிசடைகளைக் கைது செய்யத் துப்பில்லை.

      இன்றுள்ள நவீன வசதிகள் முதலாளித்துவ இதழியலில் பல புதிய திறப்புகளை உண்டு பண்ணியிருப்பினும் அதன் மறுபுறம் கோரமாகவே உள்ளது.


 

         முதலாளித்துவ இதழியலுக்கு முதல்தான் முக்கியம். அது தன் பணியாளர்களைப் பற்றிக்கூட அது கவலைப் படுவதில்லை.

      பாரதி பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிஞனாக மட்டுமல்ல பத்தரிக்கையாளராகவும் மகத்தான பணி செய்தவர். பிரித்தானிய காலனியாதிக்கத்தில் பத்தரிக்கையாளர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளைச் சற்றுக் கூடுதலான, முற்றிலும் வேறு வகையான தொந்தரவுகளை இன்று நேர்கொள்ள வேண்டியுள்ளது.


 

         100 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் இடம்பெற்றது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலநாகை என்னும் சிற்றூர்.

     அங்கு ஒரு தியான மண்டபம் கட்டியிருக்கிறார்கள்.

       27.05.2018 அன்று  வெள்ளி மாலை எனது மூத்த மகள் கவிநிலாவுடன் மேலநாகை சென்று வந்தேன்.

 

27/05/2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக