ஞாயிறு, பிப்ரவரி 05, 2017

கல்வியும் குழந்தைகளும்

கல்வியும் குழந்தைகளும்

                                                              மு.சிவகுருநாதன்



(04.02.2017 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த ‘மனித நேயப் பள்ளிகள் குறித்த ஆசிரியர்கள் கலந்துரையாடலுக்கு’ தயாரிக்கப்பட்ட குறிப்புகள்.)


     குழந்தை நேயப்பள்ளிகள் (Child Friendly Schools) ஒரு இனிமையான கருத்தாக்கம். சீர்மிகு காவல், மனித நேயக் காவல் என்பதுபோல் இதுவும் வெற்று முழக்கமாக இருக்கக் கூடாது.

       கல்வியின் ஒவ்வொரு அலகும் குழந்தையுடன் முரண் எதிர்வை உண்டாக்குகிறது. எதுவுமே இன்று குழந்தைகளுக்கு Friendly ஆக இல்லை. இதனைச் சாத்தியப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி, பாடத்திட்டம், பாடநூல்கள், அரசுகள், சட்டங்கள், உளவியல், குடும்பம், சூழல், உரிமைகள், மொழிகள், விளையாட்டுகள் எதுவுமே குழந்தைகளுடன் முரணி நிற்கின்றன. இந்த உறவுகள் மேல்-கீழ் எனும் ஆதிக்கப்படிநிலைகளில் அமைந்துள்ளன. குழந்தைகளை இயல்பாக நேசிக்கும் எவருக்கும் கல்வி என்கிறபோது நேயம் போய்விடுகிறது.

குழந்தைகள் X பெற்றோர்கள்

குழந்தைகள் ஒரு கருவி, மூலதனம், வருங்கால முதலீடு, அடிமைகள், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

குழந்தைகள் X ஆசிரியர்கள்

விசுவாச அடிமைகள், சேவை செய்ய வேண்டியவர்கள், அறிவூட்டப்பட வேண்டியவர்கள், திருத்தப்பட வேண்டியவர்கள், கண்டித்து வளர்க்கப்பட வேண்டியவர்கள்

குழந்தைகள் X சட்டங்கள்

வயதெல்லைக் குழப்பங்கள், 6-14 கல்வி உரிமை, 0-3, 14-18 க்கான கல்வி உரிமை, குழந்தைத் தொழிலாளர் வயது 16, பெற்றோருடன் பணிசெய்ய உதவும் சட்டத்திருத்தம்

குழந்தைகள் X பள்ளி

சிறைச்சாலைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகள், மதிப்பீடுகள், தேர்வுகள்

குழந்தைகள் X பாடத்திட்டம்

பொருட்படுத்தாத பாடத்திட்டம், திணிப்புகள், அந்நியப்படுத்தல், வட்டாரங்களைப் புறக்கணிக்கும் பொதுப்பாடத்திட்டம், உள்ளூர் தன்மைகள் புறக்கணிப்பு

குழந்தைகள் X பாடநூல்கள்

பெரும் சுமை, அறிவுக்கான ஒரே கருவி, வேதநூல், இதைத்தாண்டி ஏதுமில்லை, வெறுப்பின் உச்சம்

குழந்தைகள் X குடும்பம்

பள்ளியை பிரதியாக்கம் செய்கிறது, குழந்தையைத் தவிர அனைவரும் ஆசிரியர்கள், படிப்பு பற்றி மீண்டும் கேட்கப்படுகிறது, எச்சரிக்கைகள்

குழந்தைகள் X உளவியல்

நடத்தைகளை பொதுமைப்படுத்தும், தனித்த உள்ளூர் நிலவரங்களைக் கணக்கில் கொள்ளாமை, இயல்பூக்கங்கள், மனவெழுச்சிகளில் வட்டார, சமூகத் தலையீடுகளைப் புறந்தள்ளும். (உம்) சாதி, மதம், தீண்டாமை

குழந்தைகள் X சூழல்

மிரட்டும் சூழல், கல்வி பற்றிய தவறான புரிதல், தேர்வு தொடர்பான தாக்குதல்கள்

குழந்தைகள் X சமூகம்

குழந்தமை குறித்த உணர்வு, கல்வி மதிப்பீடுகள், மதத் தாக்கம், விலகும்-விலக்கும் தன்மைகள், மாற்றுத்திறனாளிகளைப் போன்று குழந்தைகளுக்கும் கழிப்பறை வசதிகளின்மை

குழந்தைகள் X அரசு

அரசின் புறக்கணிப்பு, சமூக விலக்கம், தனித்த நிதி ஒதுக்கீடு இன்மை, சட்டங்களை அமலாக்கக் குறைபாடு

குழந்தைகள் X உரிமைகள்

உரிமைகள் மறுப்பு, குழந்தைகள் ஆணையங்களின் செயல்பாடின்மை, சமூக வன்முறை, குடும்ப-பள்ளி-ஊடக வன்முறைகள்.

குழந்தைகள் X மொழிகள்

குழந்தை மொழி-வட்டார மொழி நீக்கம், பொதுமொழிப் பயன்பாடு, அந்நியத்தன்மை, வட்டார அளவிலான ஆசிரியர்கள் இன்மை.

குழந்தைகள் X விளையாட்டுகள்

விளையாட்டு மறுப்பு, விளையாட்டு காட்சி ரூபமாக மாறிப்போன அவலம் (கிரிக்கெட் லைவ், இணைய விளையாட்டுகள்)

குழந்தைகள் X இலக்கியங்கள்

குழந்தை இலக்கியப் பற்றாக்குறை, மதச்சாயமிட்ட இலக்கியங்கள், சிறுவர்களுக்கு ஒவ்வாத இலக்கியங்கள், குழந்தமையைப் புறக்கணிக்கும் இலக்கியங்கள்



குழந்தைகள் சூழலை விட்டு விலகும்/விலக்கும் காரணிகள்


  •  பால் பாகுபாடுகள்
  •  உளவியல் போதாமைகள்
  •  குழந்தைகள் பற்றிய புரிதலின்மை
  •  கல்வி பற்றிய தவறான எண்ணங்கள்
  •  தேவைகளைப் புறக்கணித்தல்
  •  பாடச்சுமைகள்
  •  சொந்த வேலைகளில் ஈடுபடுத்துதல்
  •  ஊக்கமின்மை
  •  உள்கட்டமைப்புக் குறைபாடு
  •  சமூகச் சூழல்
  •  ஆதிக்கம் செலுத்தும் சக்திகள்


      இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. குழந்தை நேயப்பள்ளிகளை அடைய நிறைய தூரம் பயணிக்கவேண்டும். அரசு நம்முடன் இணைய வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியப்படும்.

1 கருத்து:

கருத்துரையிடுக