ஞாயிறு, நவம்பர் 22, 2020

பதநீர்ச் சோறு அல்லது பதநீர்ப் பொங்கல்

 பதநீர்ச் சோறு அல்லது பதநீர்ப் பொங்கல்

 

மு.சிவகுருநாதன்  

 



 

      இன்று (21/11/2020) சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றி படுக்கையில் இருக்கும் அம்மாவைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

     "என்னுடைய அப்பா, அம்மா இருந்தால் என்னை நல்லா பாத்துப்பாங்க...", என்றார். 1994 இல் காலமான ஆத்தாவிற்கும் 2001 இல் காலமான தாத்தாவிற்கும் இன்று 100 வயதைக் கடந்திருக்கும். 80 ஐ 100 கள் எப்படிக் கவனிக்க முடியும்?

      வயது ஆக ஆக குழந்தையாகவே மாறிவிடுவோம் போல. எனவே இந்த 80 வயதுக் குழந்தையின் நம்பிக்கை இப்படி இருக்கிறது. குழந்தைகளின் ஒரே நம்பிக்கை தாய் தந்தை மட்டுந்தானே!

    பதநீர்ச் சோறு நினைவில் வந்து போயிருக்கும் போல. அதைப் பற்றியும் செய்முறையையும் சொன்னார்; கேட்டுக்கொண்டேன்.

    சிறுவயதில் பலமுறை செய்து கொடுத்துள்ளார்; ருசித்துச் சாப்பிட்டுள்ளோம். அம்மா எது செய்தாலும் ருசிதானே! அதில் அறுசுவையுடன் கூடவே அன்பும் கலந்திருக்கும் அல்லவா!

      லிட்டர் கணக்கில் பதநீரை வாங்கிச் சூடாக்கித் தெளிய வைத்து, வடிகட்டி அதையே உலைநீராகப் பயன்படுத்தி, அரிசி போட்டுப் பொங்கினால் பதநீர்ச் சோறு ரெடி. இனிப்பு கூட தேவையில்லை. அவ்வளவு அமிர்தம்! தேவையெனில் கூடுதலாக இனிப்பைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    உங்களுக்கு இந்த அநுபவம் உண்டா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக