வியாழன், மே 26, 2011

வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவன் தற்கொலையும் மாணவர் போராட்டமும் உண்மை அறியும் குழு அறிக்கை

வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவன் தற்கொலையும் மாணவர் போராட்டமும்
உண்மை அறியும் குழு அறிக்கை


27.04.2011
சென்னை
வியாசர்பாடியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (தன்னாட்சி) சென்னைப் பெருநகரிலுள்ள ஆறு அரசுக்கல்லூரிகளில் ஒன்று. 1400 பேர் பயிலும் இக்கல்லூரியில் 500க்கும் மேற்பட்டோர் பெண்கள். சுமார் 70 சதத்தினர் தலித் மாணவர்கள். பொதுவாக அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மிகக் குறைவு என்பதாலும் இடஒதுக்கீட்டுக்கொள்கை சரியாகக் கடைபிடிக்கப்படுவதாலும் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் அடிநிலையில் உள்ள மாணவர்கள் அதிகம் பயில்வர். அதிலும் குறிப்பாக, வியாசர்பாடி கல்லூரியில் அதிகளவில் தலித் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். பல மாணவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற பகுதிகளிலிருந்து வந்துள்ளனர். பலரது பெற்றோர் கூலிவேலை செய்பவர்கள்.

இந்தக்கல்லூரியில் சென்ற ஏப்ரல் 11ந் தேதி இரவு முதலாமாண்டு பி.பி.ஏ. வகுப்பில் படிக்கிற த.இளையராஜா என்கிற மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட செய்தி பத்திரிகைகளில் வந்தது. கல்லூரி வருகைநாட்கள் (ணீttமீஸீபீணீஸீநீமீ) போதாமையால் மீண்டும் ஒரு செமஸ்டர் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு கல்லூரி நிர்வாகம் ஆணை பிறப்பித்ததால் மனம்நொந்து அம்மாணவன் தற்கொலைசெய்து கொண்டதாக அறிந்த மாணவர்கள் சென்ற 18ந் தேதி சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் கலவரம் நடந்ததாகவும் அதை ஒட்டி பலர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கல்லூரித் தேர்வுகள் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிந்தோம். இது குறித்து உண்மைகளை அறியவும் சுமூகமான சூழல் மீண்டும் உருவாகத் தேவையான பரிந்துரைகளைச் செய்யவும் மனிதஉரிமைஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.
1. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR)
2. முனைவர் ப. சிவக்குமார், அரசு கல்லூரி முன்னாள் முதல்வர்
3. பேரா. மு. திருமாவளவன், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி முன்னாள் முதல்வர்
4. திரு. அயன்புரம் ராஜேந்திரன், பொறியாளர், தென்னிந்திய ரயில்வே
5. திரு. எஸ். ராமாநுஜம், மென் பொறியாளர்
6. திரு. பழனியப்பன், பொறியாளர், தென்னிந்திய ரயில்வே
7. திரு. நடராஜ், மனித உரிமை ஆர்வலர்

இக்குழுவினர் சென்ற திங்கட்கிழமை (ஏப்ரல் 25) அன்று வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லூரிக்குச்சென்று பொறுப்பு முதல்வர் பேரா. எம்.பி.சந்திரசேகர், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி பேரா. சி.ஜெயகுமார், கூடுதல் தேர்வுக்கட்டுப்பாடு அதிகாரி முனைவர் பி.சத்தியமூர்த்தி ஆகியோரையும், கைதானவர்கள் உள்ளிட்ட பல மாணவர்களையும், ரெட்ஹில்சுக்கு அருகிலுள்ள பாடியநல்லூர் கிராமத்தில் வசிக்கும் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் தந்தை தனபால், தாய் முனியம்மா, சகோதரர் சாம்ராஜ் மற்றும் உறவினர்களையும் சந்தித்து விரிவாகப் பேசியது. மகாகவி பாரதி நகர் றி5 காவல் நிலையத்திற்கும் சென்றது. உதவி ஆணையர் கோவி மனோகரன் அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடியது. மாணவனது தற்கொலை தொடர்பான முதல் தகவல் அறிக்கை, தேர்வு அனுமதிச் சீட்டு (பிணீறீறீ ஜிவீநீளீமீt) ஆகிய ஆவணங்களையும் பார்வையிட்டது.

மாணவர் மற்றும் பெற்றோர் தரப்புக் கருத்து

    பி.பி.ஏ. வகுப்பிற்கு நிரந்தர ஆசிரியர்கள் யாரும் கிடையாது. இருக்கிற மூவரும் வருகைப் பேராசிரியர்கள் (நிuமீst லிமீநீtuக்ஷீமீக்ஷீs). இவர்கள் மாணவர்களைக் கடுமையாக நடத்தினர். குறிப்பாக, நீலகண்டன் என்னும் பேராசிரியர் மாணவர்களிடம் பிரச்சினை ஏற்படும்போது கடும் வார்த்தைகளால் பேசுவதும், பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் ஒரு வாரம் தொடர்ந்து வரவில்லை (ணீதீsமீஸீt) எனப் பதிவேட்டில் பதிவு செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தக் காரணங்களாலேயே மாணவன் இளையராஜாவுக்கு போதிய வருகைப் பதிவு இல்லாமற் போயிற்று.

வருகைப் பதிவைக் காரணம் காட்டி இந்த ஆண்டில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. வகுப்பில் மாத்திரம் 11 பேருக்கு ரீடூ’ (ஸிமீ-பீஷீ- அதாவது மூன்றாண்டுகள் முடிந்ததும் மீண்டும் ஒரு செமஸ்டர் பணம் கட்டிப் படிப்பது) மற்றும் இன்னொரு 10 பேருக்கு டீடெய்ன்ட்’ (பீமீtணீவீஸீமீபீ - அதாவது இந்த செமஸ்டரில் தேர்வு எழுத அனுமதி மறுப்பு. அடுத்த செமஸ்டரில் அவர்கள் எழுதலாம்) போட்டுள்ளனர். தன்னாட்சிக் கல்லூரி என்பதனால் ரீடூபோடுவது மற்றும் உள் மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண் அளித்துப் பழி வாங்குவது முதலியவற்றை மாணவர்களுக்கெதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தி வந்தனர்.
      
     மாணவர் சங்கத் தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. வேறு எந்தக் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. கல்லூரிக்குள் மாணவர்களுக்கு எந்த வசதியுமில்லை. 500க்கும் மேற்கண்ட பெண்கள் பயிலும் இக் கல்லூரியில் அவர்களுக்கு ஒரே ஒரு கழிப்பறைதான் உண்டு.

மாணவர் இளையராஜா தனது தாய் மற்றும் சகோதரருடன் சென்று உதவித் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரசேகரன் மற்றும் துறை ஆசிரியர்கள் காலில் விழுகிற அளவுக்குக் கொஞ்சி ரீடூவையை மாற்றும்படி கேட்டுக் கொண்டதாகப் பெற்றோர்கள் கூறினர்.

11ந் தேதி மாலை 3 மணி அளவில் இளையராஜாவை விஷமருந்திய நிலையில் கண்டதாகவும் அவனிடம் விசாரித்தபோது அன்று கல்லூரிக்குச் சென்றபோது தனது ரீடூவை ஆசிரியர்கள் மாற்ற முடியாது எனச் சொல்லியதோடு மோசமாகப் பேசியதாகவும் அதனால் விஷம் குடித்ததாக அவன் கூறியதாகவும், உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் சிகிச்சை பலனளிக்காமல் இரவு 10.20 வாக்கில் இறந்து போனதாகவும் பெற்றோர்கள் எம்மிடம் கூறி அழுதனர்.

12ந் தேதி மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இறந்த மாணவருக்கு இழப்பீட்டுத் தொகை தருவதற்கும் எல்லா ரீடூவையும் ரத்து செய்து தேர்வு எழுத அனுமதிப்பதற்கும் ஆவன செய்கிறேன் எனப் பொறுப்பு முதல்வர் வாக்களித்ததன் பேரில் வேலை நிறுத்தத்தை நிறுத்திக் கொண்டதாகவும் மாணவர்கள் கூறினர். எனினும் மீண்டும் 15ந் தேதி பொறுப்பு முதல்வர் இவ்வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது எனச் சொன்னதால் 18ந் தேதி காலை தேர்வு தொடங்கும் நாளில் தேர்வு எழுதாமல் சாலையில் திரண்டு மறியல் செய்துள்ளனர். அனைத்து மாணவ-மாணவியரும் தேர்வு எழுத வரவில்லை.

      சாலை மறியலைக் கைவிட்டு கல்லூரிக்குள் செல்லுமாறு காவல் துறையினர் வற்புறுத்தியதன் பேரில் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைந்ததும் கலவரம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களது வாகனங்கள் சில உடைக்கப்பட்டன. கல்லூரி வளாகத்திலிருந்த மின் விளக்குகளும், கண்ணாடி சன்னல்களும் உடைக்கப்பட்டன. யாரோ வெளியார்கள் இதைச் செய்திருக்கலாம் என மாணவர் தரப்பில் சொல்லப்பட்டாலும் காவல் துறையினர் இதை மறுக்கின்றனர். கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க போலிஸ் உள்ளே நுழைந்து மாணவர்களைத் தாக்கி சுமார் 50 மாணவர்களையும் 71 பெண்களையும் கைது செய்து கொண்டு சென்றனர். எனினும் மாலையில் பெண்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டனர். 15 மாணவர்களையும் இறந்த மாணவரின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர் உள்ளிட்ட நால்வரையும் நீதிபதி முன் நிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த 19 பேர் மீதும் ஒரே குற்ற எண்ணில் (402/2011) இந்திய தண்டனைச் சட்டம் 147, 341 மற்றும் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தல் 3(1) பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.
கல்லூரித் தேர்வுகள் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி நிர்வாகத் தரப்புக் கருத்துக்கள்

    யாரையும் பழி வாங்கும் நோக்கில் வருகைப் பதிவைக்குறைப்பது கிடையாது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் இளையராஜா கல்லூரிக்கு ஒழுங்காக வருவது கிடையாது. அவனது வருகைப் பதிவு 40 சதத்திற்கும் குறைவாக இருந்ததால் ரீடூபோட்டோம். பின்பு அவன் பெற்றோருடன் வந்து வேண்டியதாலும் என்.சி.சி.யிலிருந்து சான்றிதழ் வாங்கித் தந்ததாலும் 50 சத வருகை இருப்பதாகக் கணக்கில் கொண்டு அவனது ரீடூவை ரத்து செய்து பீமீtணீவீஸீமீபீஎன மாற்றி அடுத்த செமஸ்டரில் எழுதலாம் எனச் சொல்லி தேர்வு அனுமதிச் சீட்டிலும் உரிய திருத்தம் செய்து அனுப்பினோம். பிறகு ஏன் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்பது எங்களுக்குத் தெரியாது. வீட்டில் ஏதும் வேறு பிரச்சினைகள் இருந்திருக்கலாம்.

   காலம் மிகவும் தாமதமாகிவிட்டதாலும் இதர வேலைகள் இருந்ததாலும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தவில்லை. பி.பி.ஏ. துறை ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களில்லையாயினும் திறமையானவர்கள். நீலகண்டன் ஒரு சிறந்த ஆசிரியர். சற்றுக் கெடுபிடியாக இருந்தால்தான் மாணவர்கள் ஒழுங்காக வகுப்புக்கு வருவார்கள். ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் ரொம்பவும் தாராளமாக இருந்து எல்லோருக்கும் வருகைச் சான்றிதழ் வழங்கிவிடுவதால்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

 ‘ரீடூவை ரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது. எனினும் அதற்கான அனுமதி கோரி எழுதியுள்ளோம். தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை வைத்து ஒரு சில மாணவர்கள் லாபம் தேட முயற்சிக்கின்றனர். இப்படியே அனுமதித்தால் பிறகு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுபவர்களுக்கெல்லாம் வருகைப் பதிவு தர வேண்டியதாக இருக்கும்.
மாணவர்கள் கலவரத்தால் அன்று ஆசிரியர்களது வாகனங்களுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ. 80,000. கல்லூரிக்கு ஏற்பட்ட சேதத்தை சிக்கனமாகச் சரி செய்யவே ரூ.1,00,000 தேவையாகும்.

எமது பார்வைகள்

எமது குழுவில் சுமார் 37 ஆண்டுகளுக்கு மேல் அரசு கல்லூரிகளில் பணியாற்றிய மூன்று பேராசிரியர்கள் இருந்தனர். எங்களுடைய அனுபவத்தின் அடிப்படையிலும் இருதரப்புக் கருத்துக்களைத் தொகுத்துக் கொண்டதன் அடிப்படையிலும் இப்பிரச்சினை தொடர்பான எமது பார்வைகளாவன:

01.      கழிப்பறை முதலான அகக் கட்டுமானங்கள் இல்லாமை என்கிற அரசு கல்லூரிகளுக்கே உரித்தான பொதுவான குறைகளைத் தவிர இக் கல்லூரிக்கே உரித்தான சில நிர்வாகக் குறைகள் இளையராஜாவின் தற்கொலைக்கும், இன்றைய பிரச்சினைக்கும் காரணமாகியுள்ளன. இந்தக் குறைகளில் சிலவற்றிற்கு அரசும், சிலவற்றிற்கு கல்லூரிக் கல்வி இயக்ககமும், சிலவற்றிற்கு கல்லூரி நிர்வாகமும் காரணமாக இருந்துள்ளன.
02.      கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் இல்லை. ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. பிரச்சினைக்குரிய பி.பி.ஏ. துறை உள்ளிட்ட பல துறைகளில் அதிக அளவில் வருகைப் பேராசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு வெறும் 6,000 ரூபாய் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. பிற நிரந்தர ஆசிரியர்களைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவாக ஊதியம் பெறும் இவர்கள் அதே அளவும், சமயங்களில் கூடுதலாகவும் வேலை செய்ய வேண்டியவர்களாகவும் உள்ளனர். வேலை நிரந்தரமின்மை என்கிற டெமாக்ளிஸ் கத்தி தலை மீது ஆடும் நிலையிலுள்ள இவர்கள் மீது ஒரு துறையின் முழுப் பொறுப்பையும் சுமத்தும்போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
03.      ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட பின்பும், தேர்வுப் புறக்கணிப்பு மற்றும் சாலை மறியல் முதலான சூழல் உள்ள நிலையிலும், நிரந்தர முதல்வர் கூட இல்லாத இக் கல்லூரிக்கு இயக்குனரோ அல்லது கூடுதல் இயக்குனரோ வந்து பார்வையிடவுமில்லை, மாணவர்களைச் சந்தித்துப் பேசவுமில்லை. நிலைமை அத்துமீறியபோது பொறுப்பு முதல்வர் இயக்குனருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் போலீசுக்குச் சொன்னதோடு நிறுத்திக் கொண்டுள்ளார். கல்லூரிக்கு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
04.     கல்லூரி நிர்வாகம் குறிப்பாக பொறுப்பு முதல்வர், சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இக் கல்லூரியில் பணியாற்றுபவரும் வேதியியல் துறைத் தலைவரும், கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான சத்தியமூர்த்தி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயகுமார் ஆகியோர் பல விதிமுறை மீறல்களுக்குக் காரணமாகியுள்ளனர். அவை:
05.    (அ) பிரச்சினைக்குரிய பி.பி.ஏ. துறையில் மூன்று ஆசிரியர்களும் வருகைப் பேராசிரியர்களாக உள்ள நிலையில் வேறு ஏதேனும் துறையைச் சேர்ந்த நிரந்தரப் பேராசிரியர் ஒருவர் துறைத் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இக் கல்லூரியிலேயே முன்பு அம்முறை பின்பற்றப்பட்டுள்ளது. தற்போது அவ்வழிமுறை பின்பற்றப்படாதது மிகப்பெரிய தவறு.
06.    (ஆ) மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற விதி இங்கே கடைபிடிக்கப்படாததற்கான உரிய காரணம் எதையும் கல்லூரி நிர்வாகத்தால் சுட்டிக்காட்ட இயலவில்லை. அப்படி நடந்திருந்தால் மாணவர்களின் குறைகள் அவ்வப்போது அவர்களின் பிரதிநிதிகளால் நிர்வாகத்துடன் பேசப்பட்டுக் களையப்பட்டிருக்கும். ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு நிலைமை கெட்டிருக்காது.
07.     (இ) தன்னாட்சிக் கல்லூரிகளில் மாணவர் குறை தீர்க்கும் செல்’ (நிக்ஷீமீவீஸ்ணீஸீநீமீ ஸிமீபீக்ஷீமீssணீறீ சிமீறீறீ) அமைக்கப்பட வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதி. இக் கல்லூரியிலேயே கூட சில ஆண்டுகளுக்கு முன் அது செயல்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு அது செயல்படவில்லை. ஆனால், அப்படியான செல் இப்போதும் உள்ளது என்று பொறுப்பு முதல்வர் கூறினார். யார் அந்த செல்லுக்கு பொறுப்பு என நாங்கள் வினவியபோது அவரால் மாணவர் குறை தீர்க்கும் செல்லின் பொறுப்பு ஆசிரியரின் பெயரைச் சொல்ல இயலவில்லை. இந்த செல் செயல்படவில்லை என்பதே உண்மை. செயல்பட்டிருந்தால் அவ்வப்போது மாணவர்கள் தம் குறைகளைச் சொல்லி நிவாரணம் பெற்றிருக்கலாம்.
08.      (ஈ) பெரும்பாலும் அடித்தளச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிற கல்லூரிகளில் வருகைப் பதிவு குறைவாக இருப்பது எதிர்பார்க்கக்கூடியதே. இதை ஆசிரியர்கள் மிகச் சிரத்தை எடுத்து இரக்கத்துடன் அணுகுவது அவசியம். ஒவ்வொரு மாதமும் மாணவரின் வருகைப் பதிவைக் காட்டி அவரிடம் கையொப்பம் பெறுவதும், தேவையானால் வீட்டிற்குக் கடிதம் எழுதி எச்சரிப்பதும், அறிவிப்புப் பலகையில் வருகைப் பதிவு விவரங்களை ஒட்டுவதும் அவசியம். இக் கல்லூரியில் இது மேற்கொள்ளப்படவில்லை. எனினும், பல துறைகளில் அது கடைபிடிக்கப்பட்டது என்றார் பேரா. சத்தியமூர்த்தி. பி.பி.ஏ. துறையில் கடைபிடிக்கப்பட்டதா எனக் கேட்டதற்கு தெரியாது எனப் பதிலளித்தார்.
09.     (உ) கல்லூரி ஆட்சிக் குழுவைக் கூட்டி வருகைப் பதிவைக் காரணம் காட்டித் தேர்வு எழுதுவது தடுக்கப்படுவது குறித்து எல்லாத் துறைகளுக்கும் சீரான அணுகல் முறை உருவாக்கப்படவில்லை. 50 பேர் பயிலும் முதலாமாண்டு பி.பி.ஏ. வகுப்பில் மட்டும் இந்த முறை 21 பேருக்கு ரீடூமற்றும் டீடெய்ன்ட்போடப்பட்டுள்ளது. கல்லூரி ஆட்சிக் குழு மட்டத்திலேயே இப் பிரச்சினை சற்றே நெளிவு சுளிவுடன் கையாளப்பட்டு தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
10.     இளையராஜாவின் குடும்பத்தாரின் வேண்டுகோளையும், என்.சி.சி. வருகைப் பதிவையும் கணக்கில் கொண்டு அவரது ரீடூவை டீடெய்ன்ட்ஆக மாற்றி அவரிடம் விளக்கிச் சொல்லி கையொப்பம் பெற்று அனுமதிச் சீட்டிலும் உரிய மாற்றங்கள் செய்து அனுப்பியதாக பொறுப்பு முதல்வரும் பேரா. சத்தியமூர்த்தியும் கூறினர். அம் மாணவரின் அனுமதிச் சீட்டு நகல் இத்துடன் இணைக்கப்படுகிறது. அதில் பழைய நிலுவைத் தாள்களை மட்டுமே எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. ரீடூவை, ‘டீடெய்ன்ட்ஆக மாற்றியதற்கான எந்த ஆதாரமும் அதில் இல்லை. தவிரவும் மாணவன் சாகும் தருவாயில் பெற்றோரிடம் தந்துள்ள வாக்கு மூலத்திலும் தனக்கு ரீடூஎனச் சொல்லி விட்டதாகவே குறிப்பிட்டுள்ளான். ஒருசில ஆசிரியர்கள்கடுமையாகப் பேசிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளான். ரீடூவை டீடெய்ன்ட்ஆக மாற்றிவிட்டதாக அம் மாணவனிடம் விளக்கிப் புரிய வைத்தது உண்மை எனில் அம் மாணவன் ஏன் அத்தகைய தற்கொலை என்கிற உச்சபட்ச முடிவைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்பதற்கு நிர்வாகத்திடம் பதிலில்லை. சோழவரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு (குற்ற எண்: 246/2011 குற்றப் பிரிவு, குற்ற நடைமுறைச் சட்டம் 174) இக் கண்ணோட்டத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.
11.     பிரச்சினை உருவான பின்பும் நிர்வாகம் மிகுந்த மெத்தனத்துடன் நடந்துள்ளது. பொறுப்பு முதல்வரோ, துறைத் தலைவர்களோ, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்துப் பேசவில்லை. மாணவர்கள் மட்டுமின்றிக் காவல் துறை உதவி ஆணையர் கோவி மனோகரனும் இதைக் குறிப்பிட்டார். எங்களிடம் விளக்கமாகப் பேசிய அவர் தேர்வுக்குப் பாதுகாப்பாகக் காவல் துறையினரைக் காலை 8.15 மணிக்கே அனுப்பிவிட்டதாகவும், மாணவர்கள் தேர்வுப் புறக்கணிப்பைத் தொடங்கியவுடன் பொறுப்பு முதல்வரோ, பேராசிரியர்களோ யாரும் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்காததே பிரச்சினை முற்றியதற்குக் காரணம் எனவும் கூறினார். தவிரவும் இத்தகைய சூழலை முன்கூட்டியே எதிர்பார்த்து 18ந் தேதிக்கு முன்னதாகவே மாணவர்களைக் கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தி இந்நிலையை நிர்வாகம் தவிர்த்திருக்க வேண்டும் என அவர் கூறியதும் ஏற்புடையதாகவே இருந்தது. காவல் துறையினரான நாங்கள் என்ன செய்ய முடியும்? வளாகத்திற்கு வெளியே சட்ட ஒழுங்கை நிலைநாட்டத்தான் முடியும். மாணவர்கள் பிரச்சினையை ஆசிரியர்கள் தானே தீர்க்க வேண்டும்?” என்றார் துணை ஆணையர்.
12.     மாணவர்களைத் தவிர பாதிக்கப்பட்டுள்ளவர்களான இறந்த மாணவரின் சுற்றத்தாரையும் ஏன் கைது செய்தீர்கள் என நாங்கள் கேட்டபோது, “கல்லூரிக்குள் ஏற்பட்டுள்ள பொருட் சேதம் குறித்து நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நாங்கள் அவர்களைக் கைது செய்ய நேரிட்டது. விசாரணையில் அவர்களுக்கு உள்ளே நடந்த கலவரத்தில் பங்கில்லை எனத் தெரிந்தால் விட்டுவிடுவோம். இருந்தாலும் மாணவர்கள் போராடுகிற இடத்தில் அவர்களுக்கு என்ன வேலை. அவர்களுக்குக் குறைகள் இருந்தால் அதை தீர்ப்பதற்கு வேறு வழிகளில்லையா?” எனத் துணை ஆணையர் பதிலளித்தார். மாணவரின் பெற்றோர்கள் தினசரிக் கூலி வேலை செய்பவர்கள். அதிகம் படித்திராதவர்கள். எப்படித் தமது குறைகளை வெளியிடுவது எனக் கூடத் தெரியாதவர்கள். அவர்களையும் குற்றச் செயலில் தொடர்புபடுத்தியுள்ளதை ஏற்க இயலாது.
13.    மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான நிர்வாகத்தின் அணுகல் முறை கவலைக்குரியதாக உள்ளது. அடித்தள மாணவர்கள் மத்தியில் பணிபுரிகிறோம் என்கிற பொறுப்பற்று அவர்கள் பேசினர். அந்த மாணவனின் சகோதரர் ஒருவர் இரண்டு மாதம் முன்பாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் கூட இளையராஜா நீண்ட காலம் கல்லூரிக்கு வராமலிருந்திருக்கலாம். அவனுக்கு வேறெதாவது வீட்டில் பிரச்சினை இருந்து தற்கொலை செய்திருக்கலாம்என்கிற ரீதியில் பொறுப்பு முதல்வரும் பேரா. சத்தியமூர்த்தியும் பேசினர். இளையராஜாவின் சகோதரர் கொல்லப்பட்டது நான்காண்டுகளுக்கு முன்பு என்பது குறிப்பிடத்தக்கது.
14.      பேரா. சத்தியமூர்த்தி மீது மாணவர்களுக்கு வெறுப்புள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இக் கல்லூரியில் அவர் பணி செய்கிறார். நல்ல ஆசிரியராகவும் நேர்மையானவராகவும் இருந்த போதிலும் ஒரு ஆசிரியர் என்பதற்கு அப்பால் விதிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அதிகார மையமாக அவர் இருந்து வந்துள்ளார். முதல்வரை நாங்கள் சந்திக்கச் சென்றபோது கூட அவர் உடனடியாகச் சத்தியமூர்த்தியை வரவழைத்து அவரே எல்லாவற்றிற்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார். எந்த முதல்வர் வந்தபோதும் இவரே முதல்வரைப் போலச் செயல்பட்டு வந்துள்ளார். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்து பதவிக் காலம் முடிந்தவுடன் ஒதுங்கிக் கொள்ளாமல் மீண்டும் கூடுதல் கட்டுப்பாட்டு அதிகாரிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவரே முழு அதிகாரத்துடன் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தானில்லாவிட்டால் கல்லூரியே செயல்படாது (வீஸீபீவீsஜீமீஸீsணீதீறீமீ) என்கிற உணர்வு அவரது பேச்சில் வெளிப்பட்டது.
15.      கல்லூரி ஆசிரியர் கழகத்தின் செயலாளராகப் பேரா. சத்தியமூர்த்தி உள்ளார். வட்டார அளவுத் தலைவராக முதல்வர் சந்திரசேகர் உள்ளார். இவ்வாறு நிர்வாக அதிகாரமும், சங்க அதிகாரமும் இணையும்போது பன்மடங்கு அதிகாரக் குவியல் ஏற்பட்டுவிடுகிறது. இந்நிலையைத் தவிர்ப்பது குறித்து ஆசிரியர் சங்கங்கள் யோசிக்க வேண்டும்.

எமது பரிந்துரைகள்

     01.தேர்வு காலவரையின்றி ஒத்திப் போடப்பட்டுள்ள நிலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். தாமதமாகத் தேர்வு நடத்தி முடிவுகளைத் தாமதமாக வெளியிடுவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
02.     அந்த நோக்கில் உடனடியாகச் செய்ய வேண்டியவை:
03.     (அ)  பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டமொன்றை உடனடியாகக் கூட்டி சுமூகமான முடிவு எடுக்க முயற்சிக்க வேண்டும்.
04.      (ஆ)  சுமூகமானச் சூழலை உருவாக்குவதைக் கணக்கில் கொண்டு மாணவர்கள் மற்றும் இளையராஜாவின் தந்தை உட்பட இதர நால்வர் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
05.      (இ)  ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலைக் கணக்கில் கொண்டு எல்லா ரீடூமற்றும் டீடெய்ன்ட்மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
06.      நிர்வாகக் கோளாறுகளும் அமைப்பு ரீதியான குறைபாடுகளுமே மாணவன் இளையராஜாவின் தற்கொலைக்குக் காரணமாகியுள்ளது. இதை வேறு காரணங்கள் சொல்லித் திசை திருப்புவது வருந்தத்தக்கது. அரசு இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு இறந்த மாணவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
07.      மாணவன் இளையராஜாவின் ரீடூவை டீடெய்ன்ட்ஆக மாற்றி அவனுக்குத் தெரிவித்து விட்டோம் எனக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக சொல்லப்படுவதற்கு உரிய ஆதாரம் உள்ளதா என்பது விசாரிக்கப்பட வேண்டும். தற்கொலை வழக்கிலும் இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
08.     முற்றிலும் வருகைப் பேராசிரியர்களே உள்ள துறைக்கு ஏன் நிரந்தரப் பேராசிரியர் ஒருவரைப் பொறுப்பாக நியமிக்கவில்லை, ஏன் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்படவில்லை, ஏன் மாணவர் குறை தீர்க்கும் செல் ஒழுங்காகச் செயற்படுத்தப்படவில்லை, வருகைப் பதிவு குறைவது தொடர்பான எச்சரிக்கை எல்லா மாணவர்களுக்கும் முன்னதாகச் செய்யப்பட்டதா என்பது குறித்துத் துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். உடனடி எதிர்காலத்தில் இக்குறைகள் களையப்பட வேண்டும்.
09.      கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும். உரிய காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அரசு கல்லூரிகளில் உள்ள வருகைப் பேராசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10.     தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ஒருவர் மீண்டும் வேறு பெயரில் அதே அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது தடுக்கப்பட வேண்டும். பேரா. சத்தியமூர்த்தி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
11.      அரசு கல்லூரிகளில் பெரும்பாலும் அடித்தள மாணவர்களே அதிகம் படிப்பதால் கல்லூரி ஆசிரியர்களுக்குச் சமூக நீதி மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த உணர்வூட்டும் (sமீஸீsவீtவீsணீtவீஷீஸீ) பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். புதிதாகப் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு பணியில் சேர்வதற்கு முன்னுள்ள பயிற்சிலும் இது உடனடிக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
12.      அரசு கல்லூரிகளிலுள்ள டுடோரியல்அமைப்பு மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பு ஆகியன மேலும் திறனுடன் செயல்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர் சங்கங்களும் இதில் அக்கறை காட்ட வேண்டும்.





தொடர்பு:
அ. மார்க்ஸ், 3/5 முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர்,
சென்னை - 600 020         செல்: 094441 20582

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக