ஞாயிறு, டிசம்பர் 11, 2011

எனது கவிதை முயற்சிகள் - தலைப்பிடப்படாத இரு கவிதைகள்

எனது கவிதை முயற்சிகள் 


தலைப்பிடப்படாத இரு கவிதைகள்   

                                   -மு.சிவகுருநாதன் 


01 

எவ்வளவோ வழிகள் 
சென்று திரும்ப 
அடைபட்டுப்போயினதென்றாலும்
கிடைத்துவிட்டதாக 
முடியாத ஒன்றை 
சொல்லியும் விடலாந்தான் 
வந்து விட்டதற்கான 
சுய அடையாளங்களைத் தவிர்த்து 
எஞ்சியதையும்  மாற்ற முடிந்தால்...
இருப்பினும் 
விட்டுவிடத் தோன்றுகிறது 
இதுவும் நடக்கக்கூடும் 
பிடிமானம் 
கூடியிருக்காத வரையில்...

02 

சாந்துப் பொட்டெடுத்து
தூணில் எதோ எழுதிப் பார்க்கிறாள்
தோளில் தொங்குகிற குழந்தையோடு 
எழுத்துக்கள் ஒன்றோடொன்று  
பிணைந்து 
குழந்தையைவிட வேகமாக
அலறுகின்றன 
அவள் எழுதுவது எவன் பெயரை 
அறியத்துடிக்கும் 
திடுக்கிடலில் பல முகங்கள் 
எதோ
முகமற்ற ஒன்றைத்தேடி 
சுயத்தை இழக்கும் 
மனித முகங்கள் 


ஒரு பின் குறிப்பு :- 

சி.சுப்ரமணிய பாரதியின் 130 - வது பிறந்த நாள் இன்று.  என்னுடைய கவிதை முயற்சிகள் இரண்டை இங்கு வெளியிட பாரதியின் கவிதைகள் தந்த துணிச்சல் முதன்மையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக