வியாழன், ஜனவரி 31, 2013

இவர்களை என்ன செய்யலாம்?


இவர்களை என்ன செய்யலாம்?        -மு.சிவகுருநாதன்

       06.12.2011 எனது வலைப்பூவில் இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர் - என்ற தலைப்பில் அண்ணல் அம்பேத்கர் பற்றிய குறிப்பொன்றை எழுதியிருந்தேன். அதில் தமிழக அரசின் பத்தாம்வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் (பதிப்பு – 2011, பக். 72) அம்பேத்கர் தொடங்கிய இயக்கமான பஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (Bahishkrit Hitaharini Sabha) என்பதை பாசிகிருத்கிக்காரணி சபா (Outcastes Welfare Association) என்று தவறாக சுட்டப்பட்டிருப்பதை அக்கட்டுரையில் சொல்லியிருந்தேன்.
     மோசமான இந்தப் பிழையை 2012 மறுபதிப்பில் பகிஷ்கிருத்திகாராணிசபா (மறுபதிப்பு – 2012, பக். 72) என்று திருத்தியுள்ளனர். பாசி, காரணி என்று எள்ளல் செய்தவர்கள் தற்போது கிருத்திகா, ராணி என சொல்வதை எப்படி பொறுப்பது?  என்ன கொடுமை இது! இவ்வளவு கேவலமாக பாடத்திட்டம் எழுதுபவர்களை என்ன செய்வது? அக்கட்டுரையின் இணைப்பு இதோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக