வெள்ளி, ஆகஸ்ட் 16, 2019

‘வரை’, ‘முடிய’ என்ற சொற்களின் பொருளறிந்துப் பயன்படுத்துதல்

  ‘வரை’, ‘முடிய’  என்ற சொற்களின் பொருளறிந்துப் பயன்படுத்துதல்  

 மு.சிவகுருநாதன் 

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 40) 
       


       பாடநூல்களில் ‘முதல்’, ‘வரை’, ‘முடிய’ போன்ற சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதில்  ‘வரை’, ‘முடிய’ போன்ற சொற்களைப் பொருளறிந்துப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. பாடநூலில் இவற்றின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. ஆனால் குழப்பம் தொடரவேச் செய்கிறது.

     பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘பருவக்காலங்கள்’ எனும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.  

     “வானிலை நிபுணர்கள் இந்திய காலநிலையில்  நான்கு பருவங்களை அடையாளம் கண்டுள்ளனர்.  அவை.

1. குளிர்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி வரை

2. கோடைக்காலம்: மார்ச் முதல் மே வரை

3. தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது  மழைக்காலம்: ஜுன் முதல் செப்டம்பர் வரை

4. வடகிழக்கு பருவக் காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை”, (பக். 111)

       ஆங்கில வழியில் இவ்வாறு உள்ளது.

“Seasons
The meteorologists  recognize the four distinct  seasons in India. They are;
1. Winter or cold  weather season  (January - February).
2. Pre Monsoon or summer or hot weather  season (March - May).
3. Southwest monsoon or rainy season  (June - September).
4. Northeast monsoon season  (October - December)”.    (page: 100)

    ஆங்கிலத்தில் எழுதுவதைப் போல இணைப்புக் (hyphen) குறியிட்டு  (-) எழுதுவதில் சிக்கலில்லை என்றே தோன்றுகிறது. ‘முதல்’,  ‘முடிய’ என்றெழுதும்போது பொருள் மாறுபடுகிறது. 

    “மார்ச் முதல் மே வரை”, என்றால் மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களை மட்டுமே குறிக்கிறது. “மார்ச் முதல் மே முடிய “, என்று சொன்னால் மட்டுமே மார்ச், ஏப்ரல், மே எனும் மூன்று மாதங்களையும் குறிக்கின்றது.
  
   இதைப்போலவே, “சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை” என்று சொன்னால் அது சட்டப்பிரிவு 11 ஐ உள்ளடக்காது; 5 - 10 ஐ மட்டும் குறிக்கும். பாடநூல் எழுதுபவர்கள் இதைப் பொருளறிந்து பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.

  எனவே, ‘பருவ  காலங்கள் ‘ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ள வரிகள் கீழ்க்கண்டவாறு அமையலாம்.

     “வானிலை நிபுணர்கள் இந்திய காலநிலையில்  நான்கு பருவங்களை அடையாளம் கண்டுள்ளனர்.  அவை.

1. குளிர்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி முடிய

2. கோடைக்காலம்: மார்ச் முதல் மே முடிய 

3. தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது  மழைக்காலம்: ஜுன் முதல் செப்டம்பர் முடிய 

4. வடகிழக்கு பருவக் காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் முடிய” 

     10 சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் இந்திய அரசியல் சட்டப்பிரிவுகளைக் குறிப்பிடும்போது இச்சிக்கல் தலையெடுக்கிறது.  எடுத்துக்காட்டாக சில வரிகள் இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன. ‘வரை’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘முடிய’ எனும் சொல்லைப் பயன்படுத்திக் இக்குழப்பத்தைப் போக்கலாம்.

         ‘சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை’,  ‘சட்டப்பிரிவுகள் 12 ல் இருந்து 35 வரையுள்ள’, ‘சட்டப்பிரிவுகள் 36 ல் இருந்து 51 வரை’, ‘சட்டப்பிரிவு  36ல் இருந்து 51 வரை’, ‘6 முதல் 14 வயது வரையுள்ள’, ‘சட்டப்பிரிவு 268ல் இருந்து 293 வரை உள்ள’, ‘சட்டப் பகுதி XVII இல்  343 லிருந்து 351 வரையுள்ள’, ‘பகுதி V இல் 52 முதல்  78 வரையிலான’,  ‘65 வயது வரை’, ‘பகுதி VI இல் 152  முதல் 237 வரையிலான’ போன்றவற்றை  முறையே,  ‘சட்டப் பிரிவுகள் 5 லிருந்து 11 முடிய’,  ‘சட்டப்பிரிவுகள் 12 லிருந்து 35 முடிய உள்ள’, ‘சட்டப்பிரிவுகள் 36 லிருந்து 51 முடிய’, ‘சட்டப்பிரிவு  36 லிருந்து 51 முடிய’, ‘6 முதல் 14 வயது முடிய உள்ள’, ‘சட்டப்பிரிவு 268 லிருந்து 293 முடிய உள்ள’, ‘சட்டப் பகுதி XVII இல்  343 லிருந்து 351 முடிய உள்ள’, ‘பகுதி V இல் 52 முதல்  78 முடிய’,  ‘65 வயது முடிய’, ‘பகுதி VI இல் 152  முதல் 237 முடிய ’  என மாற்றி எழுதுவது நல்லது.    

 “இந்திய அரசியலமைப்பின் பாகம் II  சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப்  பற்றி விளக்குகின்றன. (பக்.187)

“Articles 5 to 11 under part II of the  Constitution deals with the citizenship”. (page: 171)

“இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III)  12 ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள்  அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன”. (பக்.187)

“The Fundamental Rights are enshrined  in Part III of the Constitution from Articles  2 to 35”. (page:171)  (12 வெறும் இரண்டானதுதான் மிச்சம்?!)

“அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்,  இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு  36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது”. (பக்.189)

“The Directive Principles of State Policy are  enumerated in Part IV of the Constitution 
from Articles 36 to 51”. (page: 173)

“6 முதல் 14 Zவயது வரையுள்ள குழந்தைகள்  அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல்”.  (பக்.191)


“To provide opportunities for education to  his child or ward between the age of six and  fourteen years”. (page: 174)

“இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி  XII சட்டப்பிரிவு 268ல் இருந்து 293 வரை உள்ள பிரிவுகள் மத்திய-மாநில அரசுகளின்  நிதி சார்ந்த உறவுகளைப் பற்றி விளக்குகிறது”. (பக். 191)


“Article 268-293 in Part XII deal with the  Financial relations between centre and the 
States”. (page: 175

“அரசியலமைப்பு சட்டப் பகுதி XVIIஇல்  343 லிருந்து 351 வரையுள்ள சட்டப்பிரிவுகள்  அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன”.  (பக்.192)


“Part XVII of the Constitution deals with the official language in Articles 343 to 351”.  (page: 175)

“இந்திய  அரசியலமைப்பின் பகுதி V இல் 52 முதல்  78 வரையிலான சட்டப்பிரிவுகள் மத்திய அரசின்  நிர்வாகம் பற்றி குறிப்பிடுகிறது”. (பக்.197)


“Articles 52 to 78 in part V of Indian  Constitution deals with the Union Executive”. (page: 180)

“இது இந்திய  அரசியலமைப்புச் சட்டம் பகுதி V இல் 79 முதல் 122  வரை உள்ள சட்டப்பிரிவுகள், இந்திய நாடாளுமன்ற அமைப்பு, உள்ளடக்கம், ஆயுட் காலம், அலுவலர்கள்,  செயல்முறைகள், சிறப்புச் சலுகைகள், அதிகாரங்கள் பற்றி குறிப்பிடுகிறது”. (பக்.203)
 
“Article 79 to 122 in part V  of the constitution deal with the organization, composition, duration, officers, procedures,  privileges, powers and so on of the Parliament”. (page: 186)

“உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் நீடிப்பர்”. (பக்.207)

“The Chief  Justice and other judges of the Supreme  Court hold the office up to the age of 65  years”. (page: 190)

“அரசியலமைப்பின்     சட்டப்பிரிவுகள்  அனைத்து மாநிலங்களுக்கான  சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடுகிறது.  ஆனால் அரசியலமைப்புப் சட்டப்பிரிவு 370 ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து  வழங்கியுள்ளது”. (பக். 212)

“It lays down a uniform structure for the State  Government, in part VI of the constitution  from Article 152 to 237, which is applicable  to all the states, save only the state of Jammu  and Kashmir which has a separate constitution  for its government under Article 370”. (page: 195)

 

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக