ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

திருவாரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

 திருவாரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

                                                                          -மு.சிவகுருநாதன் 











      விடுதலைக்குயில்கள் (கலை இலக்கிய இயக்கம்) நடத்தும் ,
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம் இன்று (15.04.2012) காலை 11  மணிக்கு திருவாரூர் , ராயல் பார்க் ஹோட்டலின் செனட் ஹாலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    காலை அமர்விற்கு தலைமையேற்ற கம்பீரன் வேலூர் மாவட்டத்திலும் தருமபுரி மாவட்டம் அருரிலும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பெரும் கொண்டாட்டங்களுடன் நிகழ்ந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். 
 அம்பேத்கரின் நூல் தொகுப்பு - 17  இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதைப்போல அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் தொகுப்புகள் விடுதலைக்குயில்கள் அமைப்பின் மூலம் இனிவரும் காலங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார். 


  அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை தவிர்த்துவிட்டு இங்கு மார்க்சியம் பேசமுடியாது என்ற அவர்,  மார்க்சியப் பாதையில் செயல்படும் விடுதலைக்குயில்கள் அமைப்பு அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை  அறிமுகம் செய்யவிரும்புகிறது என்றும் சொன்னார்.


      தளபதி கிருஷ்ணசாமி - ஓர் ஆளுமை என்ற தலைப்பில்  யாழன் ஆதி உரையாற்றினார். தோழர் வள்ளிநாயகம் தளபதி கிருஷ்ணசாமியை உரிய முறையில் அறிமுகம் செய்துள்ளார் என்றும் எனது உரைக்கும் அதுவே அடிப்படை என்றும் யாழன் ஆதி குறிபிட்டார். காலை அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

     இரு அமர்வுகளிலும்  இரா. ஓவியா, கு.உமாதேவி, தய்.கந்தசாமி
 ஐ.ஜா.ம. இன்பக்குமார்,  மன்னை மகேஷ்குமார், சிவக்குமார் முத்தய்யா, கலைபாரதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இக்கருத்தரங்கில் பேரா.அரச.முருகுபாண்டியன், பேரா.தெ.வெற்றிசெல்வன், வழக்கறிஞர் சிவ. ராஜேந்திரன், 
கவிஞர் விஷ்ணுபுரம் சரவணன், மகேந்திரன்   மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக