வியாழன், அக்டோபர் 27, 2016

வாசிப்புப் பண்பாடு

வாசிப்புப் பண்பாடு


மு.சிவகுருநாதன்

திருவாரூர்


இன்றைய, தி இந்து (அக்.26,2016) வில் வெளியான வாசகர் கடிதம்.

அக்டோபர் 22 அன்று வெளியான 'பதிவர்கள் ஏன் சினிமா விமர்சனம் எழுதிக் குவிக்கிறார்கள்' தலையங்கத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

சினிமா பற்றி எழுதிக் குவிக்கும் வலைப்பதிவர்கள் நூல்களைப் பற்றியும் எழுத முன்வரவேண்டும்.

நூல் அறிமுகம் என்பது கடும் உழைப்பை, வாசிப்பை வேண்டுகிற வேலை. இங்கு குழந்தைப் பருவம் தொட்டே வாசிப்புப் பண்பாடு வளர்த்தெடுக்கப்படவில்லை.

காட்சி ஊடகங்களை அணுகுவதும் விமர்சிப்பதும் மிக எளிதாக அமைந்து விடுகிறது.

நான் படிக்கும் நூல்கள் பற்றிய விமர்சனக் குறிப்புகளை எனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நன்றி: தி இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக