செவ்வாய், ஜூன் 28, 2011

100 வயதை நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய விளமல் கல் பாலம்.

100 வயதை  நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய 

விளமல் கல் பாலம்.               -மு.சிவகுருநாதன்

 


100 வயதை  நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய 

விளமல் கல் பாலம்

              
                                      கட்டப்பட்ட ஆண்டு :1912  
               
                                       100 வது ஆண்டு:2012 
              
                                      ஆறு :ஓடம்போக்கி ஆறு 
 




        அரசுத்துறையெங்கும் ஊழல் நாறிக்கிடக்கிறது. அரசால் காட்டப்படும் பள்ளிகள், சிறு பாலங்கள் ஆகியவை 10 ஆண்டுகளைக்  கூட தமது ஆயுளாகக் கொள்ளாதவை. சாலைகள் போட்ட சில மாதங்களில் மரித்துப்போகின்றன.
 
            ஆங்கிலேயர்களால் ( டல்ஹௌசி பிரபு )  150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பொதுப்பணித்துறையால்  1912  இல் கட்டப்பட்ட ரெகுலேட்டருடன்  கூடிய விளமல் கல் பாலம் விரைவில் தனது 100 வயதை  நெருங்குகிறது. 
 
         அவ்வப்போது இப்பாலம் பராமரிப்புப்பணி  மேற்கொள்ளப்பட்டாலும் நீரை தேக்கிவைக்கும் மதகுகள் ரெகுலேட்டருடன் அமைக்கப்பட்டதோடு மேற்புறத்தில் சாலைப் போக்குவரத்திற்கும் இந்தப் பாலம் தொடர்ந்து பயன்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் மற்றொரு பாலம் கட்டப்பட்டவுடன் இதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இப்போது இதன் ரெகுலேட்டர் நல்லமுறையில் இயங்கி வருகிறது. 

        இன்றைய நமது அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடிக்கும் கொள்ளைகளைப் பார்க்கும்போது எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்த அந்நியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து இம்மாதிரியான பணிகளை செய்து முடித்துள்ளனர். இவர்கள் ஆற்றிய பணிகள் சிலவற்றை கூட நம் ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்  செய்யாதது வேதனைக்குரிய விஷயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக